பிரிட்டன் அணு நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது
பிரிட்டனைச் சேர்ந்த அணுசக்தி நிரம்பிய நீர்மூழ்கிக் கப்பல் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் இதனால் ஆபத்து எதுவும் இல்லை என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
ஹெச்.எம்.எஸ். அஸ்டூட் என்ற இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அணு உலைகள் மூலம் இயங்குவதாகும். இது 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படது.
328 அடி நீளம் உள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஸ்காட்லாந்து மேற்குக் கடலில் ஸ்கை என்ற தீவுக்கருகே பாறைகளில் மோதியது.
"இது அணு தொடர்பான சம்பவம் அல்ல, இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் அணுசக்தியில் இயங்கினாலும் ஆபத்து ஒன்றுமில்லை, இதனால் சுற்றுச்சூழல் தாக்கம் எதுவும் இல்லை." என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக