என்னை வெறுத்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், அவர்கள் என்னை மேலும், வலிமையுடையவனாக மாற்றினார்கள்.
என்னை நேசித்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், அவர்கள் என் இதயத்தை விரிவடையச் செய்தார்கள்!
என்னைக் குறித்துக் கவலைப்பட்டவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், என் மீது அக்கறையுடையவர்கள் பலர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் தந்தார்கள்!
என்னை விட்டுப் பிரிந்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், உலகில் எதுவும் நிலையானதில்லை என்று, அவர்கள் எனக்கு உணர்த்தினார்கள்!
என் வாழ்க்கையில் புதிய வரவாக நுழைந்தவர்களுக்கு என் நன்றி! ஏனென்றால், நான் இன்று யாராக இருக்கிறேனோ, அதற்கு அவர்கள் காரணமாக இருந்தார்கள்!