சனி, 20 ஆகஸ்ட், 2011

ஒரு ஆணுக்கு ஒரு பெண் மிக அழகாக தெரியும் நான்கு பருவங்கள்

ஒரு ஆணுக்கு ஒரு பெண் மிக அழகாக தெரியும் நான்கு பருவங்கள்
===================================================பெண்களுக்கு அருஞ்சொற்ப்பொருள் 'அழகு' என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு ஆணின் கண்களுக்கு சில சமயங்களில் பெண்கள் மிக மிக அழகாக தெரியும் நான்கு பருவங்கள் எதுவாக இருக்கும் என்று சிந்தித்தால் இந்த நான்கை தவிர வேறொன்றும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இதோ....

1 .வயிற்றின் மீது அமர்ந்து கொண்டு நெஞ்சில் ரோமங்களை பிய்த்து விளையாடி கொண்டு கொஞ்சு மொழியில் "அவ்ப்ப, அப்பா..." என தன் மகள் முதன் முதலில் கூறுவதை கேட்கும் போது ஒரு தந்தைக்கு ###மழலை##

2. தன்னோடு சகஜமாக பேசிக்கொண்டும் சண்டையிட்டு கொண்டும் பழகிய தோழி திடீரென வரமால் ஒரு மாதம் கழித்து பெரிய மனுஷியாகி வகுப்பறையில் நுழைந்தும் அவள் ஒன்றும் பேசாமல் மௌனத்தை மட்டும் பதிலாக தரும்போது அவளின் சக தோழனுக்கு ##இளமை##

3. மனைவியை வளைகாப்பு முடிந்து அவளின் தாய் வீட்டில் விட்டு விட்டு மூன்றும் மாதம் கழித்து அவளைக்காண செல்லும் போது நிறை மாத வயிற்றை பிடித்து கொண்டு அவள் வந்து "ரொம்ப இளச்சிட்டிங்களே" என பரிவோடு சொல்லுகையில் ஒரு கணவனுக்கு ##தாய்மை##

4. அழுவலகத்தில் ஆயிரம் வேலைகளை முடித்து, பிள்ளைகள் பள்ளி பாடங்களுக்கு உதவி செய்து விட்டு, மனைவியின் புலம்பல்களை கேட்டு விட்டு அப்பாடா! என வரண்டாவில் இரவு வந்து உட்காரும் போது, அம்மா தலை கோதி "சாப்ட்டியாடா..? " எனக்கேட்கும் போது ஒரு மகனுக்கு ##முதுமை##

தோல்விகளைத் தந்த முடிவுகள்

தோல்விகளைத் தந்த முடிவுகள் எவ்வளவுஆராய்ந்து எடுக்கப்பட்டிருந்தாலும் இன்னும் நல்லாயோசிச்சிருக்கலாமோ என்றஏக்கத்தை ஏற்படுத்துகின்றன

அன்பின் மதிப்பு

இன்று நமக்கு கிடைக்கும் விலைமதிப்பில்லாத அன்பின் 'மதிப்பு' நாளை ஒரு நாள் அது கிடைக்காமலே போகும் போது மட்டுமே உணரப்படுகிறது..

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

ட்விட்டர் – சுருக்கு வழிகள்


ட்விட்டரில் மொக்கை போடும் வேகத்தை இன்னும் விரைவாக்க சில சுருக்கு வழிகளை இங்கு பகிர்கிறேன்.
நேரக்கோட்டின் (Time Line)
மத்தியிலோ, கீழோ இருக்கும் போது மேலே செல்லவும், புதிப்பிக்கவும் முற்றுப்புள்ளி (Full Stop) ” . “ பயன்படுத்தலாம்.
பக்கத்தின் கீழே செல்ல ” SPACE BAR “ பயன்படுத்தலாம்.
ட்விட்டரில் தேட ” / “ இந்தக் குறியைப் பயன்படுத்தலாம்.

ஒரு ட்விட்டைப் படித்துக்கொண்டிருக்கும் போது, அதை
மீள் ட்வீட் செய்ய ” t “ அழுத்தலாம்
பதிலளிக்க ” r “ அழுத்தலாம்
பிடித்தமானதாகத் தேர்ந்தெடுக்க ” f “ அழுத்தலாம்
அந்த ட்வீட்டின் கூடுதல் தகவல்களைப் பெற ” ENTER “ விசையை அழுத்தலாம்.

நேரக் கோட்டின்
முகப்புப் பக்கத்தை அடைய ” g ” பிறகு ” h “
உங்களுக்கு வந்த பதில்கள் பக்கத்தை அடைய  ” g ” பிறகு ” r “
உங்கள் சுயவிவரப் பக்கத்தை அடைய  ” g ” பிறகு ” p “
நீங்கள் விரும்பிய ட்வீட்களின் பக்கத்தை அடைய  ” g ” பிறகு ” f “
செய்தி அல்லது தகவலை
அனுப்ப ” m” 
செய்தி அல்லது தகவல் பக்கத்திற்குச் செல்ல
 ” g ” பிறகு ” m “

புதன், 17 ஆகஸ்ட், 2011

என்.ஆர்.ஐ.கள் இந்தியாவில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி? - கம்ப்ளீட் கைடன்ஸ்



வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருக்கும் என்.ஆர்.ஐ.கள் அனைவரின் முதல் ஆசையாக இருப்பது, சொந்த ஊரில் வசதியான அழகிய வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பதாக இருக்கிறது. இதற்காக அவர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் அங்கே இருந்தபடியே இந்தியாவில் எளிதாக சொத்து வாங்க முடியும்.

யாரெல்லாம் என்.ஆர்.ஐ.?


1973-ம் ஆண்டின் அந்நிய செலாவணி கட்டுப்பாடு சட்டப்படி, வேலை வாய்ப்பு, வணிகம் அல்லது வேறு காரணங்களால் வெளிநாட்டில் நீண்ட காலமாக தங்கியிருப்பவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாக (என்.ஆர்.ஐ.கள்) கருதப்படுகிறார்கள்.

இவர்கள் தவிர, இந்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசு அமைப்புகளில் வெளிநாடுகளில் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள், சர்வதேச நிதியம், உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவைகளில் பணியாற்றுபவர்கள், மத்திய - மாநில - பொதுத்துறை நிறுவனங்களுக்காக வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், இந்திய வம்சாவளியினரும் வீட்டுக் கடனை பெறலாம்!

எதுக்கெல்லாம் கடன் உதவி?

* மனை வாங்க..!
* அடுக்குமாடி குடியிருப்பு வாங்க..!
* வீடு கட்ட.. .!
* வீட்டை அழகுபடுத்த .!
* வீட்டை விரிவாக்கம் செய்ய...!
* இன்னொரு மாடி (தளம்) கட்ட..!

இப்படி பல்வேறு விஷயங்களுக்காக கடன் வாங்கிக் கொள்ளலாம்.

தற்போது இந்தியாவிலுள்ள பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தாரளமாக வீட்டுக் கடன் கொடுத்து வருகின்றன. எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்ஸிஸ் பேங்க், கனரா, ஐ.டி.பி..ஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை கடன் அளிக்கின்றன.

வெளிநாட்டு வாழ் இந்தியரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் யார் வேண்டுமானாலும் இந்தியாவிலுள்ள வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை வாங்கிக் கொள்ளலாம். கடன் வழங்கும் நிறுவனத்தில் பொது அதிகார ஆவண (Authorised Power of Attorney) படிவம் ஒன்றை தருவார்கள். இது கடன் பெறுபவர் தனக்கு பதில், கடன் வாங்குவது தொடர்பான அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட, வேறு ஒரு நபருக்கு அதிகாரம் கொடுப்பதாகும். இதனை கடன் வாங்க உள்ள என்.ஆர்.ஐ. நிரப்பி, தான் பணிபுரியும் நாட்டிலுள்ள தூதரகம் அல்லது துணை தூதரகத்தில் கொடுத்து அங்குள்ள அதிகாரியின் கையெழுத்து மற்றும் அலுவலக முத்திரையை வாங்கி இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் கடன் வாங்குபவர் இந்தியா வர வேண்டிய அவசிமியமில்லை. 'பவர்' பெறும் நபரே கடன் வாங்குபவர் சார்பில் அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொள்ளலாம்.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

பொதுவாக மனை என்றால் அதன் மதிப்பில் சுமார் 60-70 சதவிகிதம், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு என்கிறபட்சத்தில் அதன் மதிப்பில் 80-85% தொகை கடனாக கிடைக்கும். மீதியை கடன் வாங்குபவர் தன் கையிலிருந்து மார்ஜின் மணியாக போட வேண்டும். இது தவிர, கடன் வாங்குபவரின் திரும்பச் செலுத்தும் திறனும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

என்.ஆர்.ஐ.-ன் சம்பளம் குறைவாக இருக்கிறது. ஆனால், அதிக தொகை கடனாக  தேவைப்படுகிறது என்றால் வருமானம் ஈட்டும் இன்னொருவருடன் இணைந்தும் கடன் வாங்க முடியும். அந்த இன்னொருவர் என்.ஆர்.ஐ. ஆக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தியாவிலுள்ள துணைவராக (கணவன்/மனைவி) அல்லது மகனாக இருக்கலாம். சொத்துப் பத்திரத்தை அடமானம் வைப்பதன் பேரில்தான் கடன் வழங்கப்படுகிறது. இது தவிர, இரு தனி நபர்களின் உத்தரவாதம் (கேரண்டி) தேவைப்படும்.

கடன் வாங்குபவரின் மாத ஊதியம், வயது, கல்வித் தகுதி, பணி அனுபவம், துணைவரின் வருமானம், சொத்து, வேலை தொடரும் ஆண்டுகள், ரொக்க இருப்பு, இந்தியா திரும்பிய பின் வேலைவாய்ப்பு, சேமிப்பு உள்ளிட்டவைகளை அலசி ஆராய்ந்துதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

ஒருவரின் மாதச் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். அவரின் மாதச் சேமிப்பு 18 ஆயிரம் ரூபாய். இதே சம்பளம் கொண்ட இன்னொருவரின் மாதச் சேமிப்பு பத்தாயிரம் ரூபாய் என்றால் யார் அதிகமாக சேமிக்கிறார்களோ அவருக்குதான் எளிதில் கடன் கிடைக்கும்.

வட்டி விகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு உள்ளதை விட ஓரிரு சதவிகிதம் அதிகமாக இருக்கும்.

தேவையான ஆவணங்கள்:

* பணிக்கான ஒப்பந்தம்
* மாத சம்பள ரசீது
* வெளிநாட்டில் பணிபுரிவதற்கான அனுமதி
* கடன் வாங்குபவருக்கு அவரின் நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையின் நகல்
* விசா முத்திரைப் பதிக்கப்பட்ட பாஸ்போர்ட்
* கட்ட இருக்கும் மற்றும் வாங்க உள்ள வீட்டின் அப்ரூவல் பிளான்
* மனை கிரயப் பத்திரம் (அசல் மற்றும் நகல்)
* தாய் பத்திர நகல்
* வில்லங்கச் சான்றிதழ் - குறைந்தது 13 ஆண்டுகளுக்கு
* கட்டுமானச் செலவு மதிப்பீடு அறிக்கை
* வீட்டின் மதிப்பீடு அறிக்கை

கடனை எப்படி திரும்ப கட்டுவது?

கடன் பெற்ற வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனங்களில் இந்தியாவிலுள்ள உறவினர்கள் அல்லது நண்பர்கள் நேரில் ரொக்கப்பணமாக அல்லது காசோலை மூலம் செலுத்தலாம். அல்லது என்.இ.ஆர். அல்லது எஃப்.சி.என்.ஆர், என்.ஆர்.ஓ.கணக்கு மூலம் கட்டலாம்.
வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். என்.ஆர்.ஐ-க்கு பதில் இந்தியாவிலுள்ள அவரின் மிகவும் நெருங்கிய உறவினர்களை மட்டுமே கடனை அடைக்க சில வங்கிகள் அனுமதிக்கின்றன.

முக்கிய அம்சங்கள்..!

கடன் வாங்குபவரின் வயது வரம்பு: 21-55 ஆண்டுகள்

கடன் தொகை: ரூ.25,000 முதல் ரூ. 3கோடி வரை 

மார்ஜின் மணி : 15-20%

கடன் தொகை: மாதச் சம்பளத்தைப் போல் சுமார் 20-30 மடங்கு கடனை திரும்பச் செலுத்தும் காலம்: 5-15 ஆண்டுகள் (சில வங்கிகள் 20 ஆண்டுகள் கூட அனுமதிக்கின்றன)

வட்டி விகிதம் : மாறுபடும் வட்டி சுமார் 11-14%, நிலையான வட்டி 14-16%
பரிசீலணை கட்டணம்: 1-2% (கடன் தொகையில்)
எக்ஸ்டிரா டிப்ஸ்
* ஆன்லைன் விளம்பரங்கள், புரோக்கர்கள் வார்த்தைகளை மட்டும் நம்ப்பி சொத்து வாங்கும் முடிவை எடுக்காதீர்கள்.

* முடிந்த வரையில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை மனை அல்லது சொத்தை நேரில் பார்த்து வரச் சொல்லுங்கள். 

புதன், 10 ஆகஸ்ட், 2011


சிவில் மற்றும் மெக்கானிக் துறையினருக்கு உதவும் அசத்தலான 2D CAD இலவச மென்பொருள்.


சிவில் மற்றும் மெக்கானிக் துறையினருக்கு உதவும் அசத்தலான 2D CAD இலவச மென்பொருள்.



தொழில்நுட்ப வரைபடங்கள் , கட்டிடகலை திட்டங்கள் , கிராபிக் வடிவமைப்பு மற்றும் இயந்திர பாகங்களின் வடிவமைப்புக்கு உதவும் ஒரு பயனுள்ள இலவச மென்பொருளைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

மெக்கானிக் துறையில் டிசைன் என்ற வார்த்தையை கேட்டதும் உடனடியாக கணினியில் என்ன மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள் என்று யாரும் கேட்பதற்கில்லை காரணம் அனைவருக்குமே தெரியும் ஆட்டோகேட் (AutoCAD) மென்பொருள் தான் அது , AutoCad  ஒரு பெரிய கடல் தான் இதில் இருக்கும் பல சேவைகளைக்கூட நாம் இன்றும் பயனபடுத்தாமல் தான் இருக்கிறோம், இந்நிலையில் தொழில்நுட்ப வரைபடங்கள் வரைய ஒரு பயனுள்ள இலவச மென்பொருள் வந்துள்ளது, மென்பொருளின் பெயர்  LibreCAD.


இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பதிப்புகளில் கிடைக்கிறது. நமது சொந்த வேலை மற்றும் அலுவலக வேலைக்கும் இந்த மென்பொருளை இலவசமாக பயன்படுத்திக்கொள்லலாம், 2D -ல் அனைத்துவிதமான கடினமான படங்களும் எளிதாக சில மணித்துளிகள் செலவு செய்து வரையும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் வெளிவந்த சில மாதங்களிலே பலதரப்பட்ட மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது அந்த அளவிற்கு எளிமையாகவும் அனைவரும் பயன்படுத்தும் வண்ணமும் இருக்கிறது. AutoCad பயன்படுத்தும் நண்பர்களுக்கும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி இதில் இருக்கும் பல சிறப்பான சேவைகளை எளிதாக  பயன்படுத்தலாம்.மெக்கானிக் மற்றும் சிவில் துறையில் உள்ள நண்பர்களுக்கு இந்தப்பதிவை கொண்டு சேர்க்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறோம்.

எந்த நாட்டு நேரத்தையும் ஒரே நொடியில் பார்க்கலாம்


எந்த நாட்டு நேரத்தையும் ஒரே நொடியில் பார்க்கலாம்.



உலக நாடுகளின் நேரத்தை நாம் எந்த நாட்டில் இருந்தும் ஒரே நொடியில் பார்க்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. உலகநாடுகளில் நாம் பார்க்க விரும்பும் நாட்டின் நேரத்தையும் நாம் இருக்கும் நாட்டின் நேரத்தையும் உடனுக்குடன் எளிதாக தெரிந்து கொள்ளலாம். உலக நாடுகளின் நேரத்தை கணக்கிட பல இணைய தளங்கள் இருந்தாலும் அத்தனையும் விட எளிதாகவும் புதுமையாகவும் நமக்கு உலகநாடுகளின் நேரத்தை பார்க்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.timezonecheck.com
இந்ததளத்திற்கு சென்றால் மேப் வடிவமைப்பில் நமக்கு அனைத்து நாடுகளும் அதனுடன் நேரமும் தெரிகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் தகுந்தாற் போல் ஒவ்வொரு நாட்டில் நேரமும் துல்லியமாக மாறிக் கொண்டுவருகிறது. நாம் எந்த நாட்டில் இருந்து பார்க்கிறோமோ அந்த நாட்டின் நேரம் My Time என்ற பெயரில் முதலில் தெரிகிறது. இதைத்தவிர முக்கியமான நகரத்தின் பெயரை இணையதளத்தின் கீழ் இருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம்.இந்தத்தளத்தின் மூலம் உலகில் இருக்கும் எந்த நாட்டின் நேரத்தையும் துல்லியமாக எளிதாக கண்டு பிடிக்கலாம்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

விமானம் பறப்பது எப்படி?


விமானம் பறப்பது எப்படி?

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A.  ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B. முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C. கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D. பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag



ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்

டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்

விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்

சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது. 

ஹெலிகப்டரின் மேலெழும்பு விசை அதன் மேதிருக்கும் விசிரியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்

உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக..

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்

இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்ரழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொறுத்தே அமையும்

அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (ஹெலிகப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகப்டருக்கு வராது)

இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணமும் இதுவே.

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை தேவை  எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது.

நன்றி: உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

அம்மாவைப் பற்றி.


எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து, அம்மாவின் சேலைத் தலைப்பிலேயே வளர்ந்து, அவள் நிழலில் படித்து ஆளாகி, பிழைப்புக்காக எங்கோ நாடு கடத்தப்பட்ட மக்களில் நானும் ஒருவன். ஒருவேளை நீங்களும் இப்படிப்பட்டவரானால் இங்கே நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு பிடிக்கும். உங்கள் மனசாட்சியையும் உங்களிடம் பேச வைக்கும்.

அம்மாக்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். நமக்கு எல்லாமுமாக இருப்பவள், நாம் என்ன தவறு செய்தாலும் பொறுப்பேற்பவள் என. எனினும் உலகத்தில் சில விஷயங்களை இது இப்படித்தான் என வரையறுத்திட முடியாது. அதில் முதலானது அம்மா எனும் உயிர். இப்படி உயிரான அம்மாவைப் பிரிந்து, எங்கோ சென்று பிழைக்கும் வாழ்க்கை தான் வாய்க்கிறது நமக்குள் பலருக்கும். இப்படிப் உயிர் கொடுத்தவளைப் பிரிந்து, எங்கோ நவ நாகரிக உலகில், அள்ள அள்ள கை நிறையப் பணம், வாழ்க்கையில் இதுவரை கண்டிடாத இன்பங்கள் என போலி போதைக்கு அடிமையாகி, நம் சுயத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம், நமக்காக அங்கு ஒரு ஜீவன் துடித்துக் கொண்டிருக்கிறதே என்பதையும் மறந்து. இங்கே நாம் பிஸ்ஸா, பர்கர் என மேய்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், “சாப்பிடுற நேரமாச்சே, புள்ள சாப்பிட்டானோ இல்லையோ” என ஏங்கித் தவித்து கால்வயிற்றுக் கஞ்சியும் அரை வயிற்றுக் கஞ்சியுமாய் குடித்து உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பவள்தான் அம்மா. நீங்கள் ஒவ்வொரு முறையும் ஊருக்குச் செல்லும்போது பல ஆயிரங்களை அவள் கையில் கொடுத்து வந்திருந்தாலும், ஒருமுறையேனும் ஒரு ஆயிரமாவது தபாலில்/மணி ஆர்டரில் அனுப்பிப் பாருங்கள், பிறகு தெரியும் அவள் மகிழ்ச்சி என்னவென்று. “என் புள்ள காசு அனுப்பிருக்கான்” என்று ஊரெல்லாம் பறைசாற்றிக் கொண்டாடுவாள் அவள் மகிழ்ச்சியை. எல்லா அம்மாக்களும் எதிர் பார்ப்பது இதைதான்.

இப்படி வாழ்க்கைச் சுழலில் கிராமத்தை விட்டு, அம்மாவை பிரிந்து தொழிலுக்காக எங்கோ போய் நடுத்தெருவில் நின்று கொண்டிருப்போம். என்ன கொஞ்சம் கவுரவம் மட்டும் சேர்ந்திருக்கும். கை நிறையப் பணம், கார் என ஆடம்பரம் எல்லாமுமே. எனினும் இவை அனைத்தும் நம் அம்மா கையிட்டு பிசைந்து தரும் ஒரு பிடி சோற்றிற்கு ஈடாகாது. வாழ்க்கைப் போராட்டத்தின் ஒரு கால கட்டத்தில் மீண்டும் அம்மா நினைவு வரும். உடம்புக்கு ஏதாவது வந்தாலோ, நம் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆனாலோ அப்போது அம்மா தேவைப் படுவாள்.

இன்னும் கொஞ்சம் வயதாகிப் போனால், அம்மாவின் நினைப்பு இன்னும் அதிகமாகும். பிரிவின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க உறவின் ஆழமும் கூடுமே, அதுதானே நியதி. நம் அம்மா அணிந்திருப்பதைப் போல யாரேனும் உடையணிந்திருப்பதைக் கண்டாலோ, அவள் வயதொத்த, அவள் சாயல் கொண்ட பெண்களைக் கண்டாலோ ஒரு நிமிடம் மனசாட்சி கரையத்துவங்கும். வாழ்க்கையில் எதையோ இழந்து விட்ட தவிப்பு, இனம்புரியா அழுகை மனதில் பரவத் துவங்கும். அப்போது மனசாட்சி நிச்சயம் நம்முடன் பேசும், அம்மாவைப் பற்றி.