சனி, 29 அக்டோபர், 2011

ஆப்பிள் vs ஆண்ட்ராய்டு



உலகில் போருக்கா பஞ்சம்? ஈரான் & ஈராக் போர் இருபதாண்டுக்கு முன்பே முடிந்து விட்டது. அமெரிக்கா & ஈராக் போரும் , அதிபர் சதாம் தூக்கிலிடப்பட்ட கதையோடு முடிந்து விட்டது. சமீபத்தில் கடாபி  கொல்லப்பட்டதுடன் லிபியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்து விட்டது அமெரிக்கா. ஆனால், இப்போது நடக்கும் போர் ஆயுதங்களுடன், குண்டுகளுடன் நடக்கும் போர் அல்ல. தகவல் தொடர்பு துறையில் நடக்கும் போர். ஆம், ஆப்பிள் & ஆண்ட்ராய்டு இடையே நடக்கும் போர் இது. 

முப்பதாண்டுக்கு முன் சாதா கருப்பு வெள்ளை டிவி வந்தபோது நாம் ஆர்ப்பரித்ததை மறக்க மாட்டோம். அடுத்து, கலர் டிவி வந்தபோது ஏற்பட்ட குஷிக்கு அளவே இல்லை. 
அதன் பின்னர் கம்ப்யூட்டர், லேப்டாப், இன்டர்நெட், மொபைல் போன் என்று ஆரம்பித்து இப்போது ஐபாட், ஐபேட், ஐபோன் என்று ஸ்மார்ட் போன்கள் வந்தபின் தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கம் நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்று விட்டன. 

டிவியானாலும், கம்ப்யூட்டரானாலும் சரி, மொபைல் போனாக இருந்தாலும் சரி, அதில் உள்ள ‘ப்ரோம்கிராம்களுக்கு’ என்று தனி  ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேவை. 
நாம் போனில் பேசுவது, கேமரா இயக்குவது, கேம்கள் விளையாடுவது, இன்டர்நெட் பார்ப்பது, இமெயில் அடிப்பது, ஸ்கைப், ஜிடாக் மூலம் வீடியோ தொடர்பில் பேசுவது எல்லாவற்றுக்கும் இந்த  ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ‘அப்ளிகேஷன்’கள் தான் கைகொடுக்கின்றன. 

10 லட்சம் ‘ஆப்ப்’

சாதா போன்களில் அடிப்படை வசதிகள் மட்டும் இருக்கும். ஸ்மார்ட் போன்கள் என்று சொல்லப்படும் உயர்ரக மொபைல் போன்களில் தான் மிக அதிகமான வசதிகள் இருக்கும். 
ஸ்மார்ட் போன் தயாரிப்பது ஒரு நிறுவனம். அதில் உள்ள வசதிகளை ஏற்படுத்துவது இன்னொரு நிறுவனம். அந்த நிறுவனம் தான் ‘ஆப்பரேட்டிங் சிஸ்டம்’ (ஓஎஸ்) களை அளிக்கும் நிறுவனம். இந்த நிறுவனம், லட்சக்கணக்கில் ‘அப்ளிக்கேஷன்’களை பதிவு செய்து விடும். இதற்கு தான் ‘ஆப்ப்’ சாப்ட்வேர் என்று பெயர். 
ஸ்மார்ட் போன்களில் நீங்கள் பேசுவது, இன்டர்நெட் பார்ப்பது மட்டுமல்ல, இ பேங்கிங், இ ஷாப்பிங் என்று மட்டுமல்ல; எதை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். 

= உடலில் எத்தனை பாகங்கள் இருக்கின்றன; எப்படி இந்த உடல் இயங்குகிறது; உயிர் என்றால் என்ன  என்பது பற்றிய அறிவியல் நுணுக்கங்களை தெரிந்து கொள்ளணுமா?
= அந்த ஓட்டலில் சைனீஸ் புட் சூப்பராக இருந்தது, அந்த தாய்லாந்து மீன் உணவு கூட செம தான். அதுபற்றி ரெசிபி பார்க்கணுமே...
= காலைல சுப்ரபாதம் வைக்கணும், கந்தசஷ்டி கவசம் வீடியோல கிடைக்குமா? அருணா சாய்ராம், சுதான்னா எனக்கு பிடிக்கும்; அவங்களோட லாஸ்ட் இயர் டிசம்பர் கச்சேரி ஆல்பம் பார்க்கணுமே.
= யார் அந்த போதி தர்மா, சொல்றதெல்லாம் உண்மையா, அவர் பற்றி படிக்கணுமே.
= எனக்கு பிடிச்சமாதிரி வீடு கட்டணும், அதில் இன்டீரியர் செய்யணும், அது பற்றி ஒரு டெமோ பார்க்கணும். 
= அந்த கலர் டிரஸ் சூப்பர். ஆனா லண்டனில் தான் இருக்கு; அதை வாங்கணும். 
= அந்த ஆபீஸ்ல தான் என் கசின் இருக்கார்; அவரை தொடர்பு கொள்ளணும்.
இப்படி அம்மா,  அப்பாவை தவிர, எல்லாவற்றையும் யார் உதவி இன்றி, அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள, என்ஜாய் பண்ண முடியுமா? ஆம், அதை தரும் ஒரு உற்ற நண்பர் தான் இந்த ‘ஆப்ப்’ என்று அழைக்கப்படும் அப்ளிக்கேஷன்  சாப்ட்வேர். 
உலகில் நெம்பர் 1 ஓஎஸ் இதுவரை ஆப்பிள் நிறுவனம் தான் தந்தது. போட்டியாக இப்போது ஆண்டாராய்டு  என்ற பெயரில்  கூகுள் இந்த வர்த்தகத்தில்  குதித்துள்ளது. நீயா நானா போட்டி ஆரம்பித்து விட்டது. 

ஆப்பிள் ஐபோன் வாவ்...

ஆப்பிள் நிறுவனம் 2007 ம் ஆண்டு ஐபோன் அறிமுகம் செய்தபோது, அதை  அடித்துக்கொள்ள இனி யாரும் இல்லை என்று தான் பேசப்பட்டது. இதோ, சமீபத்தில் ஐந்தாம் தலைமுறை ஐபோன் ஆப்பிள் ஐபோன் 4எஸ் வெளிவந்து விட்டது. 
வீடியோ கேமரா, 3ஜி வசதிகள், மீடியா ப்ளேயர், இன்டர்நெட், வைபீ, மல்டி டச் ஸ்கிரீன் என்று ஏகப்பட்ட வசதிகள் இதில் உள்ளன. 
ஆப்பிள் நிறுவனம் 5 லட்சம் ‘அப்ளிக்கேஷன்’களை உருவாக்கியுள்ளது. இதன் எண்ணிக்கை தொடர்ந்து பல மடங்காக பெருகிக்கொண்டிருக்கிறது. 
சமையல், மருத்துவம், இசை, சினிமா, நாடகம், நாவல், காமிக்ஸ், கேம்கள், விளையாட்டு, கேளிக்கை என்று என்னென்ன பிரிவுகள் உள்ளனவோ எல்லாவற்றையும் வீடியோ, ஆடியோ என்று அள்ளித்தந்தபடி உள்ளது இந்த நிறுவனம். 

ஸ்மார்ட் போன் வாங்கி விட்டால், அதில் அடிப்படையாக சில அப்ளிக்கேஷன்கள் இருக்கும். மேலும், சில  அப்ளிக்கேஷன் வேண்டுமானால், அதில் பெற வசதி உள்ளது. சில இலவசமாக உள்ளன. சிலவற்றுக்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும்.
போனில் ‘சர்ச்சிங்’ செய்யும் போது, உதாரணமாக கோல்ப் மேட்ச் பார்க்க வேண்டும்; ஆனால், அது அமெரிக்காவில் நடந்துள்ளது, ஏன், ஒரு ஹாலிவுட் படம் பார்க்கணும், உடனே தேடலாம். அதற்கு சில டாலர் கட்டணம் இருக்கும். கட்டினால், தானாகவே டவுன்லோடு ஆகி விடும். 

100 கோடி டவுன்லோடு

சில அப்ளிக்கேஷன்களை ஆப்பிள் நிறுவனமே தயார் செய்யும். ஆயிரக்கணக்கான அப்ளிக்கேஷன்களை வெளியாரும் தயார் செய்து ஆப்பிள் மூலம் வெளியிடுவர். 
உதாரணமாக, புத்தகத்தை அதன் ஆசிரியர் ஒரு அப்ளிக்கேஷன் சாப்ட்வேராக மாற்றி, ஆப்பிள் மூலம் வெளியிடலாம். வாடிக்கையாளர் டவுன்லோடு செய்யும் போது, கட்டணத்தில் ஆப்பிளுக்கு 30 சதவீதம், ஆசிரியருக்கு 70 சதவீதம் போகும்.  

ஆப்பிள் ஐபோன் அப்ளிக்கேஷன்கள் வேண்டுமானால் இன்டர்நெட்டில் அதன் ஆப்ப் ஸ்டோர் மற்றும் ஐட்யூன் ஸ்டோர்களில்  இருந்து பெறலாம்.  கடந்த 2007 ல்  ஆப்பிள் ஐபோன் வந்தபோது ஐந்து லட்சம் டவுன்லோடு தான் செய்யப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் நூறு கோடி அப்ளிக்கேஷன்களை டவுன்லோடு செய்யும் அளவுக்கு வாடிக்கையாளர்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றது ஆப்பிள். 

ஆண்ட்ராய்டு அட்டகாசம்

கூகுள் நிறுவனத்தின் புதிய அவதாரம் தான் ஆண்ட்ராய்டு அப்ளிக்கேஷன் சிஸ்டம். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வெளியிட்டு புரட்சியை ஏற்படுத்திய 2007 ல் தான் இந்த அவதாரம் ஓசைப்படாமல் உலகில் அவதரித்தது. 

டேப்லட் கம்ப்யூட்டர் முதல் ஸ்மார்ட் போன் வரை எல்லாவற்றிலும் இதன் அப்ளிக்கேஷன்களை பயன்படுத்தலாம். அதுவும் ஆப்பிள் போல இல்லாமல், கூகுள் அங்கீகரித்த மற்ற சில நிறுவனங்களின் போன்களிலும் இந்த வசதி உள்ளது. அப்படியி ல்லாவிட்டாலும், நாமே எங்கிருந்தும்   எளிதில் டவுன்லோடு செய்யலாம். கூகுள் மூலம் தான் டவுன்லோடு செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை.

மேலும் ஜாவா தொழில்நுட்பத்துக்கு கைகொடுக்கும் வகையில் உள்ளதால், இதில் வெளியார் அப்ளிக்கேஷன்களை பதிவு செய்யவும், அதை மற்றவர் பயன்படுத்த விற்பனை செய்வதும் எளிது. ஆப்பிள் ஸ்டோரில் போய் பதிவு செய்து அவர்கள் ஒப்புக்கொண்டால் தான் ஒரு ஆசிரியர் தன் புத்தகத்தை அதன் மூலம் விற்பனை செய்ய முடியும். ஒரு தயாரிப்பாளர் தன் சினிமா சிடியை விற்பனை செய்ய முடியும். 

ஆனால், கூகுள் விஷயத்தில் அப்படியில்லை. அதன் ஒருவர் தன் திறமையை வெளிப்படுத்த எந்த ஒரு விஷயத்தையும் பதிவு செய்யலாம். அதை மற்றவர் வாங்கலாம். இதற்கு தடை இல்லை. கட்டணம் முறைப்படி பிரித்துக் கொள்ளப்படுகிறது. உதாரணமாக, குறிப்பிட்ட புத்தகத்தை தேடி கண்டுபிடித்து டவுன்லோடு செய்தால், கட்டணத்தில் அதன் ஆசிரியருக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் போய் விடும்.  கூகுளுக்கு அதன் பங்கு போய் விடும். இதனால்,  கூகுளுக்கு  திடீர் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. 

ஆண்ட்ராய்டு மார்க்கெட்

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்ப் ஸ்டோர் என்றால், ஆண்ட்ராய்டுக்கு ஆண்ட்ராய்டு மார்க்கெட். முதலில் கூகுள் அப்ளிக்கேஷன்கள், அதன் கூகுள் டிவி, நோட்புக், டேப்லட் கம்ப்யூட்டர்களில் தான் கிடைத்தது. அதன் பின், எச்டிசி நிறுவனத்தின் ட்ரீம் என்ற ஸ்மார்ட் போன்களில் கிடைத்தது. அதன் பின் ஆப்பிள் ஐபாட்டுக்கு பதிலடியாக ஐட்ராய் என்று விற்பனை செய்தது.

கடந்தாண்டு தான் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது கூகுள் ஆண்ட்ராய்டு. சாம்சங் நிறுவன போன்களில் ஆண்ட்ராய்டு புகுத்தப்பட்டது. சாம்சங்கின் நெக்சஸ் எஸ் மறறும் சமீபத்தில் வெளியான நெக்சஸ் கேளாக்சி போன்கள் , இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் மூலம் தான் விற்பனையில் சாதனை படைத்தன. 2 லட்சம் கேம்கள் உட்பட 600 கோடி அப்ளிக்கேஷன்கள் ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டு  உள்ளன.

யாரும் அப்ளிக்கேஷன் சாப்ட்வேர்களை பதிவு செய்து விற்பனை செய்யலாம். யாரும் வாங்கலாம் என்று தலையீடு இல்லா   வர்த்தகத்தை அறிமுகம் செய்து ஆண்ட்ராய்டு புது திருப்பத்தை ஏற்படுத்தியது இந்த பிசினசில். ஆப்பிளுக்கு இது சவாலாக உள்ளது  என்பது உண்மையே. 

ஆப்பிளில் உள்ளதை விட பல மடங்கு வசதிகள் கூகுள் தருகிறது. கூகுள் மேப், ஸ்கை  மேப், உள்ளூர் சர்ச்சிங், பிங்கர் ரிட்டன் லெட்டர், கூகுள் ஷாப்பர், மை ட்ராக் என்று கையடக்க போனை வைத்துக்கொண்டே, உலகை சுற்றி வரக்கூடிய வசதிகளை கூகுள் தருகிறது. 

இது வெறும் ஆரம்பமே

ஆப்பிள் & ஆண்ட்ராய்டு போர் உண்மை தானா என்று கேட்டால், மார்க்கெட் ஆய்வு நிறுவனம் நீல்சன் என்ன சொல்கிறது தெரியுமா? ‘இது வெறும் ஆரம்பம் தான். ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் ஓஎஸ்   தான் இன்னும்  முதன்மை பெறுகிறது. இதில் ஒரு சலசலப்பு  ஏற்பட்டுள்ளது உண்மை தான். 
சந்தை இப்போது இறுக்கமாக உள்ளது. இந்த போர் இன்னும் சில ஆண்டுகள் போகலாம். அதன் பின் தான் யார் முதல் என்பது தெரியும். 

இப்போது தான் ஸ்மார்ட் போனுக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 45 சதவீதத்தை தாண்டும் போது தான் ஒரு கணிப்பு கிடைக்கும். அதுவரை ஆப்பிள் & ஆண்ட்ராய்டு இடையே அடுத்தடுத்த கணைகளை புதுப்புது அவதாரங்கள் மூலம் பார்க்கலாம். அத்தோடு, இப்போது முப்பதாயிரத்தை தாண்டி கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போன்கள் விலை, ஐந்தாயிரத்துக்கு கீழ் வந்தாலும் வியப்பதற்கில்லை. அப்போது தான் உண்மையான லீடர் யார் என்பது தெரியும். 

ஆப்பிள் கசக்குமா...
< அமெரிக்க நிறுவனம் ஆப்பிள். கம்ப்யூட்டர் தயாரித்த இதன் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் சாதுர்யத்தால் ஸ்மார்ட் போன் ஆதிக்கத்தை கையிலெடுத்தது 2007 ல். 
< ஆப்பிள் கம்ப்யூட்டர், ஆப்பிள் ஐபாட், ஐபேட் என்று பைத்தியமாக இருந்த பணக்கார நாட்டு மக்கள், அதன் ஐபோன் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று ஆராதித்தனர். 
< சமீபத்தில் கேன்சருக்கு பலியாகி விட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். ‘ஆப்பிள் ஓஎஸ் தொழில்நுட்பத்தை திருடி விட்டது ஆண்ட்ராய்டு. இதற்காக ‘தெர்மோநியூக்ளியர்’போருக்கு நான் தயார்’ என்று மறைவதற்கு சில மாதம் முன் கர்ஜித்தார். 
< ஆண்ட்ராய்டு விஷயத்தில் கோர்ட் வரை போயிருக்கிறது ஆப்பிள்.  சண்டை அங்கேயும் நடக்கிறது.  சில நாடுகளில் இரு நிறுவனங்களும் , ஓஎஸ் விஷயத்தில் தடை கோரி மோதி வருகின்றன.
< ஆப்பிள் என்றால் அதற்கு இணையே இல்லை என்று நினைத்த மக்கள், இப்போது அதற்கு போட்டியாக ஆண்ட்ராய்டு போன்களை கருத ஆரம்பித்து விட்டனர். 
< விளைவு, விலை உயர்ந்த போன் என்று கருதப்பட்ட ஆப்பிள் போன், இனி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆம், குறைந்த விலை போன்களை அறிமுகம் செய்ய உள்ளது ஆப்பிள்.

நோக்கியா பகீரதப் பிரயத்னம்
< நோக்கியா, முதன்  முதலில் சிம்பியன்  என்ற ஓஎஸ் சாப்ட்வேரை  அறிமுகம் செய்தது. இது தான் சில ஆண்டுகள் முன் வரை கொடிகட்டிப்பறந்தது. அதனால் நோக்கியா நெம்பர் 1 ஆக இருந்தது.
< ஆப்பிள், ஆண்ட்ராய்டு போட்டி வந்தபின், நோக்கியா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
< இதனால், மைக்ரோசாப்ட் விண்டோஸ் மூலம், நோக்கியா புது அப்ளிக்கேஷன்களை தந்து, விட்ட இடத்தை பிடிக்க பகீரதப்பிரயத்னம் செய்கிறது. 
< நோக்கியா விற்பனை 30.7 சதவீதம் என்ற நிலை மாறி, உலக அளவில் 24.5 சதவீதத்துக்கு குறைந்து விட்டது. 
< சமீபத்தில் சி2 &03, சி2 & 06 ரக போன்கள் மூலம் ஓரளவு விற்பனை  உயர்ந்துள்ளது. 

ஆண்ட்ராய்டு பிறந்த கதை

< அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தின் பாலோ ஆல்டோ என்பவருக்கு சொந்தமான நிறுவனம் ஆண்ட்ராய்டு இன்கார்ப்பரேஷன். 
< ஆண்ட்ராய்டு என்ற நிறுவனத்தின் சாப்ட்வேர் குழந்தை தான் ஆண்ட்ராய்டு. 
< நிறுவனத்தை ஆரம்பிக்க உதவிய ஆண்டி ரூபின் திவாலானார். நிறுவனம் திண்டாடியது. அப்போது தான் கூகுள் கவனத்துக்கு இது வந்தது. 
< ஆரம்பத்தில் கூட்டு வைத்த கூகுள், 2005ல் ஆண்ட்ராய்டை  வாங்கி விட்டது.
< ஓபன் ஹேண்ட்செட் அலையன்ஸ் என்ற பெயரில் தனி துணை நிறுவனம் ஆரம்பித்து, 2007 முதல் அப்ளிகேஷன்களை கூகுள்  வெளியிட ஆரம்பித்தது. 
< ஆரம்பத்தில் கூகுள் டிவியில் ஓஎஸ் பொருத்தப்பட்டது. அதன் பின்  ஆண்ட்ராய்டு போன்களில்; மேலும் எச்டிசி போன்களில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொடிகட்டிப்பறந்தது. இப்போது சாம்சங்கில் சக்கை போடு போடுகிறது. 

பிளாக்பெர்ரியும் தயார்

< கனடா நாட்டு ‘ரிசர்ச் இன் மோஷன்’ என்ற நிறுவனம் ஆரம்பித்தது பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன். பர்சனல் டிஜிட்டல் வசதி, மீடியா பிளேயர், இன்டர்நெட் பிரவுசர், கேம்கள் என்று பல வசதிகளை தந்தது. 
< ஆப்பிள், கூகுள், நோக்கியாவுக்கு அடுத்த இடம் இதற்கு. 
< இதன் இன்டர்நெட் சேவை மகத்தானது. 91 நாடுகளில் 500 மொபைல் ஆப்பரேட்டர் கம்பெனிகள், இதை பயன்படுத்துகின்றன. 
< முதன் முதலில் பிளாக்பெர்ரி 850 ரக போன்கள் 1999 ல் வெளியானது. 
< மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஓஎஸ்கள் இதில் பொருத்தலாம். 
< கடந்தாண்டு மட்டும் 5 கோடி போன் விற்பனையானது. ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானது. 
< 2008  மும்பை தாக்குதலின் போது, தீவிராவதிகளுக்கு மெசேஜ்  அனுப்ப, வீடியோ வேவு பார்க்க உதவியது பிளாக்பெர்ரி சாட்டிலைட் போன் என்பதால் சர்ச்சைக்கு உள்ளானது.

சனி, 8 அக்டோபர், 2011

உங்கள் குழந்தைகளை அடிமைகளாக மாற்றுகிறீர்களா..?



                                      
பள்ளியில் ஆசிரியரோ, அல்லது நம் வீட்டுக்கு வரும் நபர்களோ நம் பிள்ளைகளை நீ என்னவாகப் போகிறாய் என்று கேட்டால் எல்லாப் பிள்ளைகளும் சொல்லி வைத்தார்போல் டாக்டர், எஞ்சினியர், பைலட் என்று சொல்லும்.. எந்த பிள்ளையாவது நான் தொழில் செய்யபோகிறேன் என்று சொல்லுமா?

பெரும்பாலும் அதாவது நூறில் தொண்ணூற்று ஐந்து பேர் தன் பிள்ளைகளை நீ நன்றாக படி, முதல் மதிப்பெண் வாங்கு, அப்போதுதான் நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதிக்க முடியும் என்று சொல்லி சொல்லியே அவர்களை ஒரு சிறந்த அடிமை ஆக்குகிறார்கள். எலாவற்றிற்கும் அளந்தே செலவு செய்து பிள்ளைகளையும் அதற்கு பழக்கபடுத்துகிறார்கள், இது ஒரு வகையில் நல்ல செயல் என்றாலும், அது ஒரு சிறந்த மனிதனை உருவாக்குமா?

மனிதர்களில் பணக்காரர் ஆகவே பிறந்து பணக்காரர் ஆகவே செத்துப் போகிறவர்கள் ஒரு விதம். ஏழைகளாக பிறந்து ஏழைகளாக செத்து போகிறவர்கள் இன்னொரு விதம்.. ஏழையாக பிறந்தாலும் பணம் சம்பாதிக்க வேண்டும் தொழில் செய்ய வேண்டும் அதற்கு என்ன செய்யலாம்..

ROBERT T. KIYOSAKI யின் "RICH DAD POOR DAD" என்ற புத்தகம் ஒரு பணக்கார பையனையும் ஒரு நடுத்தர பையனையும் வைத்து மிகவும் அற்புதமாக பாடம் நடத்துகிறார்.. தன் பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும் என கனவு காணும் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய நூல் இது.. இவர் நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார் , பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்..

இந்த புத்தகத்தில் சொல்லப்படும் இரண்டு சிறுவர்களும் தொழில் துவங்க வேண்டிய அடிப்படை பயிற்சிகளில் எல்லோருக்கும் தேவையான கருத்தை புகுத்தியிருக்கிறார்..

இவரின் முக்கியமான சுலோகம் "நீ பணத்திற்காக வேலை செய்யப் போகிறாயா? இல்லை உனக்காக பணம் வேலை செய்ய வேண்டுமா?" என்பது,  இதிலேயே அடங்கிப் போய்விடுகிறது அனைத்தும். அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.. அதன் உள்ளடக்கம் நிறைய உள்ளதால் விரிவாக பேசமுடியவில்லை...

இவரை பற்றிய எதிமறை கருத்துகளும் இருக்கிறது..என்றாலும் அவரின் "Rich Dad Poor Dad" நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்..

இவர் எழுதிய மிக முக்கியமான QUOTES:


I have a problem with too much money. I can't reinvest it fast enough, and because I reinvest it, more money comes in. Yes, the rich do get richer.Robert Kiyosaki - Money - Investing - Rich -



A lot of people are afraid to tell the truth, to say no. That's where toughness comes into play. Toughness is not being a bully. It's having backbone.

Robert Kiyosaki - Truth - Fear - Leadership - Strength -
Academic qualifications are important and so is financial education. They're both important and schools are forgetting one of them.

Robert Kiyosaki - Knowledge - Learning -

Money is kind of a base subject. Like water, food, air and housing, it affects everything yet for some reason the world of academics thinks it's a subject below their social standing.

Robert Kiyosaki - Money - Knowledge - Learning -

We go to school to learn to work hard for money. I write books and create products that teach people how to have money work hard for them
.Robert Kiyosaki - Money - Investing - Rich - Knowledge -



இணைப்புகள்:
About Rich Dad Poor Dad..
http://johntreed.com/Kiyosaki.html
Website:
http://www.richdad.com/default.aspx

Wikipedia
http://en.wikipedia.org/wiki/Robert_Kiyosaki

Opposite Talk:
http://normanlivla.blogspot.com/2005/10/is-robert-kiyosaki-fraud.html

வெள்ளி, 7 அக்டோபர், 2011

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்..




Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.

ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.
http://tamilcomputertips.blogspot.com/

இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....


SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...

Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
http://tamilcomputertips.blogspot.com/

இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.

பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.http://tamilcomputertips.blogspot.com/

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.  ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.

இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.  http://tamilcomputertips.blogspot.com/

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.  
 


அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் பிரட்ச்சனைகளும் அதன் தீர்வும்



புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு....

நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதியவராக இருப்பீர்கள். உங்கள் கம்ப்யூட்டரில் திடீரென சில பிரட்ச்சனைகள் வந்துவிடும். உடனே நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யக்கூடியவரை கூப்பிட்டு என்ன பிரட்ச்சனை என்று பார்க்கச்சொல்வீர்கள். அவர் நல்லவராக இருந்தால் பரவாயில்லை. பணம் பறிப்பவராக இருந்தால் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியாததை புரிந்துகொண்டு சாதாரண பிரட்ச்சனையை எல்லாம் பெரிதாகச் சொல்லி உங்களிடம் காசு பறிக்க பார்ப்பார்...........

சரி இதற்க்கு என்ன செய்யவேண்டும் நான் என்று கேட்கிறீர்களா ?

கம்ப்யூட்டரை பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நீங்கள் கம்ப்யூட்டரில் அடிக்கடி ஏற்படும் சாதாரண பிரட்ச்சனைகளைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியாது.

அப்படி சாதாரணமாக வரக்கூடிய பிரட்ச்சனை என்னென்ன ?

1) உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் முன்பு பயன்படுத்தியதை விட ரெம்பவும் வேகம் குறைந்ததாக (Slow) இருந்தால் அதன் வேகத்தை எந்தெந்த முறைப்படி அதிகப்படுத்துவது.

முதலாவதாக உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார் ஆகும்போது தானாக திறந்து செயல்பட்டுக்கொண்டிருக்கக்கூடிய சில சாப்ட்வேர்களால் (Automatic Running Programes) உங்கள் கம்ப்யூட்டர் வேகம் குறையலாம்.

இதற்க்கு நீங்கள் Start பட்டனை அழுத்தி Run என்று வருவதை கிளிக் செய்து






அதில் msconfig என்று டைப் செய்து எண்டரை அழுத்தினால் உங்களுக்கு ஒரு தட்டு ஓப்பன் ஆகும்


அதில் Startup என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து அங்கு டிக் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களில் உங்களுக்கு எந்த புரோகிராம் தேவை இல்லாமல் தானாக திறக்கிறது என்று தோன்றுகிறதோ அந்த புரோகிராம் பெயரில் உள்ள டிக்கை அகற்றிவிட்டு OK செய்துவிடலாம்.

அடுத்து Start > Control Panel > Add or Remove Programs சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த தேவை இல்லாத மென்பொருள்களை (Software) நீக்கிவிடலாம்.



அடுத்து My Computer > C Drive சென்று அதன் வலது புறம் கிளிக் செய்து Properties ஐ தேர்ந்தெடுத்து Disk clean up என்ற இடத்தை கிளிக் செய்து



அதில் உள்ள அனைதையும் டிக் செய்து தேவை இல்லாத பழைய டெம்ரவரி பைல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இதில் உள்ள பைல்களை அழிப்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த பிரட்ச்சனையும் இல்லை.

அடுத்து Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற பகுதிக்குச் சென்று Defragment என்ற பட்டனை அழுத்தி உங்கள் கம்ப்யூட்டரை கிளின் செய்யலாம்.



இந்த மூன்று முறையில் உங்கள் கம்ப்யூட்டரை கிளீன் செய்வதால் உங்கள் கம்ப்யூட்டரில் முன்பு இருந்த வேகம் குறைவு நீங்கி சிறப்பாக செயல்படும். இதைச் செய்ய நீங்கள் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர் தேவையில்லை.

2)உங்கள் கம்ப்யூட்டரில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறுதலாக செய்யப்போக உங்கள் கம்ப்யூட்டரில் உங்களை வேலை செய்யவிடாமல் கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல ஒரு பிரட்ச்சனையான பகுதி (Error Display) அடிக்கடி ஓப்பன் ஆகி உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கலாம்.





இந்த பிரட்ச்சனை தட்டை (Error Display) எப்படி போக வைப்பது.

உங்கள் கம்ப்யூட்டரில் Start பட்டனை கிளிக் செய்து Help and Support என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.அதில் undo change your computer with System Resotre என்ற இடத்தை கிளிக் செய்து
restore my computer earliery time என்ற இடத்தை கிளிக் செய்தால்
உங்களுக்கு காலெண்டர் போல ஒரு தட்டு ஓப்பன் ஆகும்
அதில் நீங்கள் இரண்டு மூன்று நாளைக்கு முன்பாக உங்கள் கம்ப்யூட்டரில் பிரட்ச்சனை இல்லாமல் இருந்த நாளை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து Next > Next அழுத்தி Finish செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் ஒரு முறை மூடி திறக்கும் (Restart). அப்படி திறந்த உடன் பாருங்கள் உங்களுக்கு ஏற்பட்ட பிரட்ச்சனை தட்டு (Error Display) மருபடியும் வராது.

3) நீங்கள் தினமும் இண்டெர் நெட் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் அந்த இண்டெர் நெட் உங்கள் கம்ப்யூட்ருக்கு வருவதற்க்கு என்னென்ன செட்டப் செய்யப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது பிரட்ச்சனை இல்லை. ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் தேதி மற்றும் நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் இரண்டு கம்ப்யூட்டர் ஒன்றாக இனைந்தது போன்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது விளக்கு போல மின்னுவதால்தான் இண்டெர் நெட் வருகிறது என்று உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் திடீரென அந்த ஐக்கான் அந்த இடத்தில் இல்லாமல் போய் இண்டெர் நெட் வேலை செய்யவில்லை என்றால் அதை எங்கு போய் எடுப்பது மறுபடி இண்டெர் நெட்டை எப்படி வேலை செய்ய வைப்பது என்பது உங்களுக்கு தெரியாது. அதற்க்காக கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவரை கூப்பிட்டு வந்து அவருக்கு பணம் கொடுத்து அதை கொண்டு வருவீர்கள்.

சரி......... அதை எப்படி கொண்டு வருவது.

உங்கள் கம்ப்யூட்டரின் முகப்பில் (Desktop-ல்) My Network Place என்ற ஒரு ஐக்கான் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் சரி இல்லை என்றால் அப்படியே அந்த கம்ப்யூட்டர் படத்தில் (Wallpaper-ல்) உங்கள் மவுசை வைத்து அதன் வலது புறம் கிளிக் செய்து Properties சென்று Desktop என்ற தளைப்பை தேர்ந்தெடுத்து Customize Desktop என்ற பட்டனை கிளிக் செய்து மேலே My Network Place என்று எழுதப்பட்ட இடத்தில் பக்கத்தில் உள்ள சிறிய கட்டத்தில் கிளிக் செய்து டிக்கை வரவைத்து ok செய்து அதை மூடிவிடுங்கள்.

இப்பொழுது My Network Place என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு வலது புறம் கிளிக் செய்து Open என்ற இடத்தை அழுத்துங்கள்.
உடனே உங்களுக்கு My Network Place என்ற ஒரு பகுதி ஓப்பன் ஆகும். அதில் வலது புறத்தில் View Network Connections என்று எழுதப்பட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.அடுத்து உங்களுக்கு அதன் வலது புறத்தில் Local Aria Connection என்று ஒரு ஐக்கான் தோன்றும். அந்த ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் வரும் Enable என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.
உடனே உங்களுக்கு பழையபடி உங்கள் கம்ப்யூட்டரின் Taskbar டைம் பக்கத்தில் அந்த இண்டெர் நெட் இரண்டு கம்ப்யூட்டர் ஐக்கான் வந்துவிடும். 
இனி உங்கள் கம்ப்யூட்டரில் இண்டெர்நெட்டை நீங்கள் பார்க்கலாம்.





சரி.......... இனிமேல் இப்படிப்பட்ட பிரட்ச்சனைகள் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தால் நீங்கள் தான் மாஸ்டர்......... 

ஸ்டீவ் ஜாப்ஸ், உலகின் மிக ஆச்சரியமான மனிதனை இழந்துவிட்டோம்


18 வயதில் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டாராம் ஸ்டீவ் ஜாப்ஸ் இதற்கு அவர் கூறிய காரணம்
நான் தொடர்ந்து படிப்பதானால் எனது பெற்றோருக்கு அது பெரும் சுமையாக இருக்கும் என்பதுதான். அதன் பின்னர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது ஆப்பிள் நிறுவனத்தை 1973 இல் இந்தியா வந்து  சென்ற பின்னரே ஆரம்பித்தார். தாமஸ் அல்வா எடிசன் இவ்வுலகை மேம்படுத்த மற்றவர்களை விட இவர் எவ்வளவோ செய்திருக்கிறார் என்பார், ஸ்டீவ் ஜாப்ஸ்.
பின்னாளில் தொழில்நுட்ப உலகின் பெரும் புரட்சியை  உருவாக்க இதுவே அவருக்கு உந்து சக்தியாக இருந்திருக்கலாம். 1997 இல் மைக்ராசாப்ட் உடன் இணைவதாக அறிவித்ததும் பார்வையாளர்களிடையே சலசலப்பு.  சிலர் இல்லை வேண்டாம் என்றே கூறினர்.
திடீரென பில்கேட்ஸ் திரையில் தோன்றி பேசத் தொடங்கினார். அதிர்ந்தே போனார்கள் பார்வையாளர்கள்.ஆனால் இன்று வரை மைக்ராசாப்டை பாட்னராக சேர்த்துக்கொண்டமை ஸ்டீவின் மிகத் திறமையான முடிவாக கருதப்படுகிறது.                                       
ஒவ்வொருமுறையும் ஒரு புதிய அறிமுகத்தை உலகிற்கு காட்டும்போது அதைக் கொண்டுவர்ந்து சேர்க்கும் ஸ்டீவ் ஜாப்ஸின் ஸ்டைலே தனி! இதற்காகவே ஆப்பிள் தயாரிப்புக்களின் ஏராளமான ரசிகர்கள் காத்துக்கிடப்பார்கள். ஐபோனின் அண்மைய பதிப்பான ஐபோன் 4S ஐ ஆப்பிள் அறிமுகம் செய்த மறுதினமே அவரின் மரணச் செய்தியும் வந்தது மிகப்பெரும் சோகம். 1984 ஆம் ஆண்டு முதல் முதலாக ஆப்பிள் கணினியின் மாக்கின் டாஸை அறிமுகம் செய்ததிலிருந்து ஸ்டீவ் ஜாப்ஸின் டாப் 10 மாஜிக்கல் தருணங்களை இங்கே பார்க்கலாம் 
 
உலகை மாற்றிய மூன்று ஆப்பிள்கள் மற்றும் "iPod iPhone iPad - now iSad" ஆகிய வசனங்கள் தற்போது பேஸ்புக்கில் மகா பிரபலம். 1000 பாடல்கள் உங்கள் சட்டைப்பையில் என்ற மிக இலகுவான கான்செப்டை வைத்து 2001 இல் Ipod ஐ உருவாக்கியது ஆப்பிள். இதுவே அப்போது மற்றவர்களுடைய தயாரிப்புக்களில் இருந்து வேறுபட்டு பெரும் வரவேற்பை பெற அடுத்து இரு வருடங்களுக்குள் ஐடீயூன்ஸை கொணர்ந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
சரியாக 8 வருடங்களில் இசை விற்பனை இன்டஸ்டிரியையே புரட்டி போட்டது ஐடியூன்ஸ் மியூசிக் ஸ்டோர். இன்று வரை இசை விற்பனையில் அதுவே நம்பர் வன்.