வியாழன், 22 செப்டம்பர், 2011

டாப் 10 சிக்கன கார்கள்


'என் வருமானத்துக்கு ஏற்ற சிறந்த கார்’ என்கிற தேடலில்தான் பலர் ஷோ ரூம் ஷோ ரூமாக ஏறி இறங்குகிறார்கள். விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களுக்குத்தான் நம் நாட்டில் டிமாண்ட் அதிகம்!காரின் விலையை மட்டும் பூதக் கண்ணாடி கொண்டு அலசி ஆராய்ந்து வாங்கினால் போதுமா? காரை வாங்கிய பிறகு பெட்ரோல், சர்வீஸ், இன்ஷூரன்ஸ் என்று எவ்வளவு செலவு வைக்கும் என்பதையும் அலச வேண்டாமா? இந்தியாவில் தற்போது அதிகமாக விற்பனையாகும் விலை குறைவான 10 கார்களை பார்போம் .


'காஸ்ட் ஆஃப் ஓனிங் தி கார்’ விவரங்களைக் கணக்கிடுவதற்கு, பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸ் செலவு எவ்வளவு ஆகும் என்பதையும் உத்தேசமாகக் கணக்கிட்டு மற்றும், இந்த மூன்று ஆண்டுகளில் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் எதுவும் இல்லை என்றால், முதலாண்டு பிரீமியத் தொகையில் இருந்து 20 சதவிகிதமும், இரண்டாவது ஆண்டு தொகையில் இருந்து 25 சதவிகிதமும் இன்ஷூரன்ஸ் பிரீமியம் குறையும். பொதுவாக, புதிய காருக்கு எக்ஸ் ஷோ ரூம் விலையிலிருந்து 5 சதவிகிதம் கழித்து 'ஐடிவி’ அதாவது Insured Declared Value தொகை நிர்ணயிக்கப்படும். அதனால், முதல் வருட இன்ஷூரன்ஸ் இல்லாமல் ஆன்-ரோடு விலையைக் கொடுத்து இருகிறார்கள் . அதேபோல், காரின் பெட்ரோல் செலவைக் கணக்கிட... ஆண்டுக்கு 10,000 கி.மீ பயணம் செய்வோம் என்ற யூகத்தின் அடிப்படையில், இன்றைய தேதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 67.50 என கணக்கில் கொண்டு காருக்கான பெட்ரோல் செலவைக் கொடுத்துள்ளோம்!

மாருதி ஆல்ட்டோ


நகரம், நெடுஞ்சாலை என இரண்டு விதமான சாலைகளிலும் பயணிக்கும்போது, ஆல்ட்டோ பொதுவாக லிட்டருக்கு 15.2 கி.மீ மைலேஜ் தரும். ஆண்டுக்கு 10,000 கி.மீ தூரம் பயன்படுத்துவோம் என்ற வகையில், மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோலுக்காக மட்டும் நாம் செலவிடும் தொகை 1,33,221 ரூபாய். ஆல்ட்டோ காரை வாங்கும்போது நாம் செலுத்தும் இன்ஷூரன்ஸ் தொகை 8,678 ரூபாய். மூன்று ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸுக்காக நாம் செலவு செய்யும் தொகை மொத்தம் 22,129 ரூபாய்.

மாருதியைப் பொறுத்தவரை மூன்று இலவச சர்வீஸ் உண்டு. முதல் சர்வீஸை கார் வாங்கியதில் இருந்து 1 மாதம் அல்லது 1000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். இது பொதுவாக சாதாரண செக்-அப்பாக மட்டுமே இருக்குமே தவிர, காரில் எதையும் மாற்ற மாட்டார்கள். இரண்டாவது சர்வீஸ், 6 மாதங்கள் அல்லது 5000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டரை மாற்ற 1,800 ரூபாய் செலவாகும். மூன்றாவது சர்வீஸ், 10 ஆயிரம் கி.மீ அல்லது ஒரு ஆண்டுக்குள் சர்வீஸ் செய்ய வேண்டும். மூன்றாவது சர்வீஸ் 1 ஆண்டு அல்லது 1000 கி.மீ இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும். இதற்கும் சுமார் 1,800 ரூபாய் செலவாகும். அடுத்தடுத்த 10,000 கி.மீ சர்வீஸ்களில் பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லாமல் சர்வீஸ் செய்வதற்கு 3,000 ரூபாய் செலவாகும். அப்படிப் பார்க்கும்போது, 3 ஆண்டுகளில் மாருதி ஆல்ட்டோ காருக்காக நீங்கள் செலவிடும் தொகை 1,64,950 ரூபாய்!

மாருதி ஸ்விஃப்ட்

இந்தியாவில் அதிகமாக அனைவராலும் விரும்பி வாங்கப்படும் கார், மாருதி ஸ்விஃப்ட். இது பொதுவாக, லிட்டருக்கு 11.5 கி.மீ மைலேஜ் தருகிறது. ஆண்டுக்கு 10,000 கி.மீ கணக்கின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஸ்விஃப்ட் காருக்கு பெட்ரோல் நிரப்ப 1,76,086 ரூபாய் செலவு செய்கிறோம். ஸ்விஃப்ட்டைப் பொறுத்தவரை முதல் சர்வீஸ் 1 மாதம் அல்லது 1,000 கி.மீ; இரண்டாவது சர்வீஸ் 6 மாதங்கள் அல்லது 5,000 கிமீ; மூன்றாவது சர்வீஸ் 1 ஆண்டு அல்லது 10,000 கி.மீ என்பதுதான் சர்வீஸ் இடைவெளி. ஆனால், அதன் பிறகு ஸ்விஃப்ட்டில் இருப்பது 'கே-சீரிஸ்’ இன்ஜின் என்பதால், பத்தாயிரம் கி.மீ அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்தால் போதுமானது. ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர்களை மாற்ற 2,000 ரூபாயும், பத்தாயிரம் கி.மீ-க்கு ஒருமுறை ஜெனரல் சர்வீஸ் செய்ய அதிகபட்சமாக 5,000 ரூபாயும் செலவாகும். இதன்படி காரின் பராமரிப்புச் செலவுகளுக்காக மட்டும் நீங்கள் செலவு செய்யும் தொகை சுமார் 12,000 ரூபாய். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் ஸ்விஃப்ட் காருக்காகச் செலவு செய்யும் தொகை 2,20,446 ரூபாய்!

டொயோட்டா எட்டியோஸ் லிவா

டொயோட்டா அறிமுகப்படுத்தி இருக்கும் சின்ன கார் எட்டியோஸ் லிவா. இது பொதுவாக, லிட்டருக்கு 14 கி.மீ மைலேஜ் தருகிறது. இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு இன்றைய விலையின்படி நீங்கள் 1,44,642 ரூபாய் பெட்ரோலுக்காகச் செலவிடுவீர்கள்.


எட்டியோஸ் லிவாவை வாங்கியதில் இருந்து 1 மாதம் அல்லது 1000 கி.மீ-க்குள் முதல் சர்வீஸ் செய்ய வேண்டும். இது இலவச சர்வீஸ் என்பதோடு, ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் எதுவும் மாற்றமாட்டார்கள் என்பதால், சர்வீஸ் செலவு எதுவும் இருக்காது. அடுத்து நேராக 10,000 கிமீ அல்லது 1 ஆண்டில்தான் சர்வீஸ் செய்ய வேண்டும். 10,000 கி.மீ-க்கு ஒருமுறை ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் மாற்ற வேண்டியிருக்கும். இதற்கு 2,000 ரூபாய் வரை செலவாகும். மூன்றாவது சர்வீஸ் 2 ஆண்டுகள் அல்லது 20,000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். மூன்று இலவச சர்வீஸ் உண்டு என்பதால், இப்போதும் ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் மாற்றும் செலவு மட்டும்தான். மூன்றாவது சர்வீஸ் 30,000 கி.மீ-ல் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு உத்தேசமாக, ஜெனரல் சர்வீஸ் என்றால் 5,000 ரூபாய் செலவாகும். ஆக மொத்தம், நீங்கள் மூன்று ஆண்டுகளில் எட்டியோஸ் லிவாவுக்காகச் செலவு செய்யும் மொத்தத் தொகை 1,94,845 ரூபாய்!

ஹூண்டாய் ஐ10


மாருதி கார்களுக்கு மாற்றாக, வேறு பிராண்ட் கார் தேடுபவர்களின் முதல் சாய்ஸ் ஹூண்டாய் ஐ10. இது லிட்டருக்கு பொதுவாக 14 கி.மீ மைலேஜ் தரும். அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோலுக்காகச் செலவிடப்படும் தொகை 1,44,642 ரூபாய். ஹூண்டாய் ஐ10 காரைப் பொறுத்தவரை, முதல் சர்வீஸ் 2 மாதங்கள் அல்லது 2,000 கி.மீ இடைவெளியில் செய்ய வேண்டும். இரண்டாவது சர்வீஸில் இருந்து பணம் செலுத்திதான் சர்வீஸ் செய்ய வேண்டும். இதன்படி ஆறு மாதங்கள் அல்லது 5,000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். அடுத்தடுத்த சர்வீஸ்கள் 10,000 கி.மீ இடைவெளிகளில் சர்வீஸ் செய்ய வேண்டும். இதன்படி பணம் செலுத்தி செய்யப்படும் ஜெனரல் சர்வீஸுக்கு 5,000 ரூபாய் வரை செலவாகும்!

டாடா நானோ

இந்தியாவின், உலகின் விலை குறைவான கார் டாடா நானோ. இது பொதுவாக லிட்டருக்கு 17.3 கி.மீ மைலேஜ் தருகிறது. இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோலுக்காக நாம் செலவு செய்யும் மொத்தத் தொகை 1,17,051 ரூபாய். இன்ஷூரன்ஸுக்காக மூன்று ஆண்டுகளுக்கு க்ளெய்ம் எதுவும் செய்யாமல் இருந்தால், உத்தேசமாக 13,191 ரூபாய் செலவு செய்வோம். டாடா நானோவை 1,000 கி.மீ அல்லது 1 மாத இடைவெளிக்கு முதல் சர்வீஸ் செய்ய வேண்டும். இதன் பிறகு 6 மாதங்கள் அல்லது 5000 கி.மீ-க்கு சர்வீஸ் செய்ய வேண்டும். 5000 கி.மீ-க்கு ஒருமுறை ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டரை மாற்ற வேண்டும். இதற்கு 1,200 ரூபாய் செலவாகும். மூன்று சர்வீஸ்களுக்குப் பிறகு ஜெனரல் சர்வீஸ் செய்ய 3,000 ரூபாய் செலவாகும். அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு டாடா நானோவுக்காக நீங்கள் செலவு செய்யும் உத்தேசமான தொகை 1,44,642 ரூபாய்!

மாருதி வேகன்-ஆர்


வேகன்-ஆர் காரிலும் கே-சீரிஸ் இன்ஜின்தான். மாருதியின் இந்த கார் லிட்டருக்கு, பொதுவாக 14.7 கி.மீ மைலேஜ் தரும். ஆண்டுக்கு 10,000 கி.மீ கணக்கின்படி மூன்று ஆண்டுகளுக்கு 1,37,754 ரூபாய் பெட்ரோலுக்காகச் செலவிடுகிறோம். மாருதி ஸ்விஃப்ட்டின் அதே சர்வீஸ் ஷெட்யூல்தான் மாருதி வேகன்-ஆர் காருக்கும் பொருந்தும். ஆனால், வேகன்-ஆர் காரை பணம் செலுத்தி சர்வீஸ் செய்ய (பெய்டு சர்வீஸ்) அதிகபட்சமாக 4,000 ரூபாய் செலவாகும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு காரை சர்வீஸ் செய்ய 10,000 ரூபாய் செலவாகும். இதன்படி மாருதி வேகன்-ஆர் காரின் மூன்று ஆண்டுகளுக்கான மொத்தச் செலவு 1,75,878.

ஃபோர்டு ஃபிகோ


ஃபோர்டு நிறுவனத்தின் மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்தியிருக்கும் கார் ஃபிகோ. இந்த பெட்ரோல் கார் பொதுவாக லிட்டருக்கு 13.15 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு பெட்ரோல் செலவு 1,53,992 ரூபாய் செலவாகும். இன்ஷூரன்ஸ் செலவுகளைப் பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 36,516 ரூபாய் செலவாகும். ஃபோர்டு ஃபிகோவின் புத்தம் புதிய இன்ஜினை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முதல் சர்வீஸ் 2,500 கி.மீ அல்லது 3 மாதங்கள் இடைவெளியில்தான் செய்ய வேண்டும். அதேபோல், ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர்களை 10,000 கி.மீ இடைவெளியில்தான் மாற்ற வேண்டும். ஃபிகோவில் 20,000 கி.மீ அல்லது இரண்டு ஆண்டுகள் இலவச சர்வீஸ் சலுகை உள்ளது. இதன்படி மூன்றாவது ஆண்டில் இருந்துதான் பெய்டு சர்வீஸ் செய்ய வேண்டும். ஆயில் சர்வீஸுக்கு 2,500 ரூபாயும், ஜெனரல் சர்வீஸுக்கு அதிகபட்சம் 5,000 ரூபாயும் செலவாகும். ஆக மொத்தம், மூன்று ஆண்டுகளுக்கு 2,00,508 ரூபாய் செலவாகும்!

ஹூண்டாய் சான்ட்ரோ


ஹூண்டாயின் விலை குறைவான சின்ன கார் சான்ட்ரோ. இந்த காரைப் பொருத்தவரை பொதுவாக, லிட்டருக்கு 15.2 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு சான்ட்ரோவுக்கான பெட்ரோல் செலவு ரூ.1,33,221. மூன்று ஆண்டுகளுக்கான இன்ஷூரன்ஸ் செலவு உத்தேசமாக 32,154 ரூபாய். ஹூண்டாய் ஐ10 காரைப் போலவேதான் ஹூண்டாய் சான்ட்ரோவின் சர்வீஸும். ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் செலவுகளைப் பொறுத்தவரை சுமார் 1,500 ரூபாயும், ஜெனரல் சர்வீஸ் செய்ய 3,500 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயும் செலவாகும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கான சர்வீஸ் செலவு 10,000 ரூபாயைத் தாண்டும். பெட்ரோல், இன்ஷூரன்ஸ், சர்வீஸ் செலவுகளைச் சேர்த்து மூன்று ஆண்டுகளுக்கான செலவு மொத்தம் 1,75,375 ரூபாய்!

செவர்லே பீட்


மூன்று ஆண்டுகள் இலவச சர்வீஸ் என்ற உத்திரவாதத்துடன் விற்பனையாகும் கார் செவர்லே பீட். இது பொதுவாக லிட்டருக்கு 13.4 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கான பெட்ரோல் செலவு சுமார் 1,51,114 ரூபாய். இன்ஷூரன்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 35,797 ரூபாய். சர்வீஸைப் பொறுத்தவரை கார் வாங்கும்போதே மூன்று ஆண்டுகள் இலவச சர்வீஸ் சலுகைக்காக 16,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்படி 3 ஆண்டுகள் அல்லது 45,000 கி.மீ-க்கு ஆயில், ஆயில் ஃபில்டர் உள்பட அனைத்து செலவுகளையும் இலவசமாகவே செய்து கொள்ளலாம்!
டாடா இண்டிகா


டிராவல்ஸ் மார்க்கெட்டில் மட்டுமல்ல, பயணிகள் கார் மார்க்கெட்டிலும் இண்டிகா அதிகமாக விற்பனையாகும் கார். பயணிகள் கார் மார்க்கெட்டைப் பொறுத்தவரை பெட்ரோல்தான் அதிகமாக விற்பனையாகும் கார். டாடா இண்டிகா ஸெட்டா, பொதுவாக லிட்டருக்கு 14 கி.மீ மைலேஜ் தரும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு 1,44,642 ரூபாய். இன்ஷூரன்ஸுக்காக மூன்று ஆண்டுகளுக்கு உத்தேசமாக 26,574 ரூபாய். டாடா இண்டிகாவை முதல் சர்வீஸ் 1 மாதம் அல்லது 1000 கி.மீ-க்குள் செய்ய வேண்டும். அடுத்த சர்வீஸ் 5000 கி.மீ அல்லது 6 மாதங்களில். அடுத்து 1 ஆண்டு அல்லது 10,000 கி.மீ-ல் சர்வீஸ் செய்ய வேண்டும். ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் மாற்ற சுமார் 1,500 ரூபாயும், ஜெனரல் சர்வீஸ் செய்ய 3,000 ரூபாயும் செலவாகும். இண்டிகாவைப் பொறுத்தவரை 4 இலவச சர்வீஸ்கள் உண்டு. நான்காவது சர்வீஸுக்கு 3,700 ரூபாயும், ஐந்தாவது ஜெனரல் சர்வீஸுக்கு 5,000 ரூபாயும் செலவாகும். இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு 14,000 ரூபாய் சர்வீஸுக்கென்று செலவாகும். மூன்று ஆண்டுகள் முடிவில், நீங்கள் காருக்காகச் செலவு செய்த தொகை 1,85,216 ரூபாய்! 


விகடன்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சாப்பாடு ரெடி நெஞ்சை நெகிழவைத்த குறும்படம்!

உலகில் இன்று எத்தனையோ குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து கொண்டு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வசதியில்லாம் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் எவ்வளவுதான் தொழில்நுட்பத்தை யும் விஞ்ஞானத்தையும் நோக்கி பயணித்தாலும் வறுமை என்பதை ஒழிக்க முடியாத ஒன்றாகி விட்டது.

இதையொட்டிய ஒரு குறும்படம் ஒன்றை அண்மையில் பார்வையுற்ற போது நெஞ்சம் நெகிழ்வடைந்துவிட்டது. உண்மையில் இதன் தாயரிப்பாளர்களை பாராட்டியே ஆகவேண்டும் வார்த்தைகள் இல்லாத சம்பவங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் மூலம் நாம் உணர்ந்து கொள்ளக்கூடிய விசயங்கள் நிறையவே இருக்கின்றன.

எனவே இதனை நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டியது எமது கடமை அல்லவா? குறும்படத்தை முழுமையாக பாருங்கள் நிச்சயம் உங்கள் இதயமும் படபடக்கும்

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

புறக்கணிப்பு

கற்கள் மிதக்கின்ற குளமொன்றில் மூழ்கிப்போகிறது புறக்கணிப்பின் எடைகொண்ட பறவையின் இறகொன்று

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

அன்பு நண்பர் mr'சக்தி {BE} என்னை பற்றி எழுதிய கவிதை


அப்பு வாகிய நான்
உங்களிடம் இதுவரை
பகிராத என் சோக கதை
ஆழித்தேரோடும் ஆரூராம்
திருவாரூரிலிருந்து
தடம் பதித்த தடயங்களை
திரும்பி பார்த்து தொடங்குகிறேன்
குழந்தை பருவம் எல்லோருக்கும் போல்
எனக்கும் இனிமையான பருவம் .
வாலிப பருவம்
என் வசந்தகாலத்தை வதைத்தது
என் கனவுகளை எட்டி உதைத்தது
என் ஊர்
எங்கெங்கு திரும்பினும்
பசுமை பாராட்டும் நெற்பயிரும்
சீராட்டும் கரும்பு தோட்டமும்
தாலாட்டி உறக்கம் அளித்த நாட்கள்
இது மட்டுமா
ஆட்சியில் எந்த கழகம் இருந்தாலும்
பச்சை வண்ணம் மாறா
அரசே நடத்தும் அமிர்தம் போன்ற மதுக்கடைகள்
நான் தள்ளாடி உற்சாகம் அடைந்த நாட்கள்
இப்படியாக தென்றலாக தவழ்ந்த வாழ்க்கையில்
புயல் வீசியது
உறவும் நட்பும் ஒன்று சேர்ந்து
திரவியம் தேட வளைகுடா தேசத்திற்கு
வழி அனுப்பி வைத்தனர்
திரும்பும் போது ஆரூர் அம்பானி
ஆகவேண்டுமாம் இது
அப்பாவின் கனவு
திரும்பிய பின் எடைக்கு எடை பொன்னோடு
பெண் பார்க்க வேண்டுமாம் இது
அம்மாவின் கனவு
சொந்தமாக தொழிற்சாலை அமைக்க வேண்டுமாம் இது
அண்ணனின் கனவு
உலகின் அணைத்து சரக்கையும்
சுவைக்க வேண்டும் இது
அடியேனின் கனவு
யாருக்கு தெரியும் என் மன உளைச்சல்
யாருக்கு புரியும் என் உள்ள புகைச்சல்
திரவியம் தேடவந்த இடத்தில்
திரவியம் கிடைத்தாலும்
சோகம் தீர்க்கும் திரவம் தான்
கிடைக்கவில்லை
என் மனம் தளரவில்லை
சொந்தமாக காய்ச்சலாமா என்று கூட
யோசித்தேன்
கள்ளசந்தையில் கிடைக்கும் நல்ல சரக்கை தேடி
பல நூறு மைல் அலைந்து வாங்கி வருகிறேன்.
வாரத்தில் ஏழு நாட்கள் மட்டுமே
தீர்த்தமாய் அருந்தி வாட்டத்தை போக்கிக் கொள்கிறேன்
ஒட்டகமாய் பிறந்திருந்தால் ஒரு நாள் பருகி
பல நாள் ஆடியிருப்பேன்
மது கிடைக்கா நாட்கள் மங்கை இல்லா ஆடிமாதமாய்
மனம் நோக வைக்கின்றன
என் தாய் திருநாட்டின் குடிமகன்கள் கண்டு
என் வயிறு எரிகிறது.
தீயணைப்பு கருவிகள் தயாரிக்கும் தொழிலில்
நானிருந்தாலும்
என் வயிற்று எரிச்சல் அணைப்போர் யாரோ?
 —
படம்  நண்பன்  ராஜ்{  போட்டோ ஷாப் }

திங்கள், 5 செப்டம்பர், 2011

கோபிநாத்தின் புத்தகம் ..ஒரு விமர்சனம்





கோபிநாத்தின் புத்தகம் ..ஒரு விமர்சனம்

இந்தப் புத்தகத்தை வாங்குங்க என்று சொல்லும் உலகில் ஒரு புத்தகத்தின் பெயர் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க... வியப்பா இருக்கில்ல.. நீயா., நானா எனக் கேட்டால் உங்களுக்குப் புரிந்துவிடும்.. அதன் பதில் நாம் என்பதும்,, நம்ம கோபிநாத்தின் புத்தகம்தான் அது என்பதும் ,,. சிக்ஸ்த் சென்ஸ் வெளியிட்டுள்ள இதன் விலை அறுபது ரூபாய்.. பர்சனாலிடி டெவலப்மெண்ட்... பவர் ஆஃப் பாசிடிவ் திங்கிங் என்பதன் விளக்கம் இது ..

அவருக்குக் கிடைத்த வாய்ப்பில் அறிந்து கொண்டவற்றை அவர் நம்மில் ஒருவராகப் பகிர்ந்து கொள்கிறார்.. நாம் ஓடிக்கொண்டிருக்கும் திசையின் இலக்கு என்ன என்று யோசிக்க வைக்க இந்தப் புத்தகம் பயன்படலாம். கணக்குகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும்போது கால்குலேட்டர் உபயோகிப்பதுபோல் இந்தப் புத்தகம் பயன்படும் என்கிறார் தன் முன்னுரையில்..

தன்னம்பிக்கைக்கு் தன்னடக்கத்திற்கும் முழுமையான உதாரணம் கோபிநாத்,..ஏறக்குறைய 14 விதமானவர்களுக்கு நன்றி கூறி தன் தன்னம்பிக்கையை தன்னைவிட அதிகமாய் நம்பும் தன் அப்பாவுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பித்திருக்கிறார்...

15 கட்டுரைகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது இது.. 

நம் சந்தோஷத்துக்கு நாமே முழுமையான காரணம்.. எல்லா உணர்வையும் வெளிப்படுத்தும் நாம் அன்பை மட்டும் வெளிப்படுத்தத் தயங்குகிறோம்.. எதைச் செய்தாலும் ரசனையோடு செய்யுங்கள்.. தினம் செய்தவற்றையே சிறிது புதிதாய் மாற்றி செய்து பாருங்கள்..

வாழ்வின் எல்லா கணங்களிலும் வெற்றி தோல்வி இருக்கிறது.. அடுத்தவர் கணிப்புக்காக அல்ல.. நமக்காகவே நாம் வாழ்கிறோம்.. பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டுபிடித்து பகுதி பகுதியாகக் களையுங்கள்..

நம்மை நாமே ரசிக்க ஆரம்பிப்பதுதான் நம் செயல்களின் வெற்றியின் முதல் படி.. தேவையான இடங்களில் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாய் இருப்பது ஒரு மனோவியாதி..
நாம் செலுத்தும் அன்பு அடுத்தவரை துன்புறுத்தாமல் இருந்தால்., நம் அன்பு உண்மையானதாக இருந்தால் நிச்சயம் நாம் செலுத்தும் அளவு திரும்பக் கிடைக்கும்.. அன்பு செலுத்துவதிலும் ., பெற்றுக் கொள்வதிலும் கஞ்சமாகவோ., இரும்பாகவோ இராதீர்கள் ..

எண்ணம் போல் வாழ்வு என்ற சொல்போல என்னவாக விரும்புகிறீர்களோ அந்த நிலைக்கு மனம் உங்களை எடுத்துச் செல்லும். நம்மையும் சுற்றி இருப்போரையும் முழுமையாக நம்ப வேண்டும்.. நம் திறமைகளை எடுத்துக்கூறி நம்மை முன்னேற்றுவதில் நம் நலம் விரும்பிகளும் அன்பானவர்களும் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.. 

எனவே நம்மை மிக நல்ல உயரங்களுக்கு இட்டுச் செல்கின்றது இந்தப் புத்தகம்.. வெற்றியாளராக, சாதனையாளராக, மக்கள் அனைவராலும் விரும்பப் படுபவராக இருக்கும் கோபிநாத்தின் இந்தப் புத்தகம் எல்லா சமயங்களிலும் உபயோகமான ஒன்று,.. படித்துப் பாருங்கள்.. உணர்வீர்கள்...!!!

கோபிநாத் இன் அருமையான கல்லூரி உரை



ஆறுதலுக்கு அலையும் மனது

என்னதான் சில வருத்தங்களைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்றாலும் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்பட்டு விடுகின்றது#ஆறுதலுக்கு அலையும் மனது

நம்ப பிளாக் & கெட்ஜெடுல youtube வீடியோ வர வைக்க எளிய வழி.




இது நெரியோ பேரு சொல்லி இருப்பங்கோ !! இருந்தாலும் நானும் ஒரு
தபா கூவிக்கிறேன் பா !!


அதே மேரி நமபுளுக்கு புட்சா மேரி கீர, வீடியோவ , நம்ப சைடுல கீர
கெட்ஜெட்ல கூட போட்டுக்கலாம் , சோக்கா இருக்கும் ,


இப்போ அது எப்பிடின்னு பாக்கலாம் , மொத்தல்ல youtube ஓபன் பண்ணி
அதுல உங்களுக்கு புட்சா மேரி கீர ஒரு வீடியோவ ஓபன் பண்ணிக்கோங்க !!


அதும் பக்கத்துல ஒரு சின்ன பொட்டில நாம்ப செலக்ட் பண்ண வீடியோ
பத்தி இருக்கும் அதுக்கு கீய Embed அப்பிடின்னு ஒன்னு இருக்கும் அத்த
அப்பிடியே காப்பி பண்ணி ,


நம்ப பிளாக்குல போடறத்துக்கு newpost இன்னு கீர்த , போய் அதுல
Edit HTML கிளிக் பண்ணி அதுல paste பண்ணிடனும் ,


அப்பால compose இன்னு கீர்த அமுக்கி பாத்தா நம்ப போட்ட வீடியோ
அங்க வந்து இருக்கும் அப்பால ,எதுனா நீங்க எழ்தரா மேரி இருந்தா
எழ்தி வெளியிடலாம் ,


அதே மேரி தான் இந்த வீடியோவ , நம்ப கெட்ஜெட்டுல போடறதுக்கும் ,
இப்போ layout ( தளவமைப்பு) போய் அதுல HTMl /javascript இன்னு கீர்த
ஓபன் பண்ணி இந்த Embed கோடிங்க paste பண்ணிடுங்க ,


அதுல கீர அளவ நம்ப கேட்ஜெட் அளவுக்கு ஏத்த மேரி மாத்திக்கலாம் ,

சனி, 3 செப்டம்பர், 2011

ஒவ்வொரு மனுஷனோட மனசும்


எவன்னே தெரியாதவனை புகழ்ந்து பாராட்டுற நம்ம மக்கள்..

கூட இருக்குற ஒருத்தன் பிரபலமாக முயற்சித்தால் மட்டம் 

தட்டியே மகிழ்ச்சி ஆகுறானுங்க




ஒவ்வொரு மனுஷனோட மனசும் பாசத்திற்காகவும்,

சின்ன சின்ன பாராட்டுக்களுக்காகவும் தான் ஏங்கிக்கிட்டு 

இருக்குனு எப்பதான் மட்டம் தட்டும் 

மடையனுங்களுக்கு தெரியுமோ..

குறை சொல்தல் வேண்டாமே!


குறை சொல்தல் வேண்டாமே!



முழுக்க முழுக்க தங்கத்தால் உருவாக்கப்பட்ட தங்க தேசத்தில் வாழ நேர்ந்தால் கூட, 'சே... எங்கே பாத்தாலும் மஞ்சளா இருக்கே' என குறை சொல்லும் மக்கள் இருக்கிறார்கள் என்கிறார் லார்ட் ஜெஃப்ரி. குறை சொல்தல் சர்வதேசக் கெட்ட குணம்.

சிலர் மனிதர்களைக் குறிவைத்து குறை சொல்வார்கள். சிலர் மனிதர்கள் என்றில்லை, விலங்குகள், தெய்வங்கள், அஃறிணைப் பொருட்கள் என எல்லாவற்றையும் குறை சொல்வார்கள். நம்முடைய ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். காலையில் எழுந்து அலுவலகத்துக்குப் புறப்படும் அந்த சின்ன இடைவெளியிலேயே குற்றம் சொல்ல ஆரம்பிக்கிறோம். பின் அலுவலகம், போகும் வழி, வரும் வழி என எல்லா இடங்களிலும் அந்த குறை சொல்தல் தொடர்கதையாகிறது.

'குறை சொல்வதால் மனதுக்கு ஓர் இனம்புரியாத திருப்தி கிடைக்கிறது. அதனால்தான் பலரும் குறை சொல்கிறார்கள்' என்கிறது உளவியல். குறை சொல்லுதல் மனதுக்கு தற்காலிகமான ஓர் இளைப்பாறுதலைத் தருகிறது. அதேவேளையில் பலரைக் காயப்படுத்துகிறது.எதையாவது அடைய வேண்டுமென முயல்கிறோம். தொடர்ந்து அதை நோக்கிப் பயணிக்கிறோம். ஆனால் முடியவில்லை. நமது இயலாமையை ஒப்புக்கொள்ள நமது 'ஈகோ' இடம் கொடுக்காது. சட்டென பழியைத் தூக்கி இன்னொருத்தன் தலையிலே போட்டுவிட்டால் வேலை முடிந்தது!

அப்படிச் சொல்வதால் உண்மையான தோல்வியின் காரணங்கள் பிடிபடுவதே இல்லை. தோல்விக்கான காரணமே தெரியாவிடில் வெற்றிக்கான பாதையை எப்படித் தேர்வு செய்வது?குறை சொல்வது மனிதனுடைய குறைபாடு! அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது. ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நமது விரோதத்தின் வேர்களே இந்த குறையெனும் முட்களை விளைவிக்கின்றன.

பிடிக்காதவர்கள் மீதுதான் குறையும், குற்றமும், விமர்சனமும் போர்த்தப்படுகிறது. 'உன் மேல எனக்கு அன்பு ரொம்ப ஜாஸ்தி, அதனால எப்போதும் குறை சொல்வேன்' என்று யாரும் சொல்வதில்லை. 
அடுத்தவருடைய வளர்ச்சியோ, நிம்மதியோ, புகழோ, அழகோ மனசுக்குள் விதைக்கும் பொறாமை விதைகள்தான் பெரும்பாலும் குறைகளாய் முளை விடும். தன்னிடம் இல்லாத ஒன்றின் பள்ளத்தாக்கை நிரப்ப முயலும் மனதின் விகார முயற்சிகளில் இதுவும் ஒன்று.குறை சொல்தல் பயத்தின் வேர்களிலிருந்தும் முளைப்பதுண்டு. குறிப்பாக அலுவலக சூழல்களில் தனது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், தங்களுடைய புரமோஷன், வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் அடுத்தவர்களை அழிக்கும் விமர்சனங்கள் எழுவதுண்டு.

நம்முடைய பொறுப்புகளை விட்டுத் தட்டிக் கழிக்க விரும்பும்போதும் முன்னே வருவது இந்தக் குறை சொல்தலும், சாக்குப் போக்கும்தான்.'ஈகோ' எனும் ஆலமரத்தின் கிளைகள் இந்தக் குறை எனும் விழுதுகள். 'ஈகோ' இருக்கும் மனிதர்கள் பிறரிடமுள்ள குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்துத் திரிவார்கள். இல்லாததை இருப்பது போலச் ஜோடித்து மகிழ்வார்கள். ஈகோவை விலக்க வேண்டுமென முடிவெடுத்தால் இந்த கெட்ட பழக்கம் உங்களை விட்டுப் போய்விடும்.

பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவும் சிலர் குற்றம் குறைகளை அள்ளி விடுவதுண்டு. பிறர் தன்னைக் கவனிக்க வேண்டும் எனும் ஆர்வம் அவர்களுக்கு. உளவியல் இதை, தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு என்கிறது.தன்னை புத்திசாலியாய்க் காட்டிக் கொள்ளவும் சிலர் குறை சொல்வதைக் கையில் எடுப்பதுண்டு. அடுத்தவர்களையோ, அவர்களுடைய செயல்களையோ விமர்சித்து, குறை சொல்லும்போது தன் தலைக்கு மேல் ஒரு ஒளி வட்டம் உருவாவது போல் கர்வம் அவர்களுக்குள் நுழையும்.

இப்படி குறை சொல்வது நமது வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டிருக்கிறது. ஒரு டிராபிக் சிக்னலில் கூட குறை சொல்லாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. ஹோட்டலில் வெயிட்டர் பத்து நிமிடங்கள் நமது டேபிளுக்கு வரவில்லையேல் குறையும், குற்றமும் சொல்ல வாய் துறுதுறுக்கிறது.

வாய்ப்பு வந்து வாசல் கதவைத் தட்டும்போது கூட 'சத்தமா இருக்கே' என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஆஸ்கார் ஒயில்டு.

குறை சொல்வது நமது வளர்ச்சியை நாமே குழி தோண்டிப் புதைக்கும் செயல். குறை சொல்வதை விட்டு வெளியே வரவேண்டுமெனில் முதலில் நாம் குறை சொல்லும் பார்ட்டிகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கேளுங்கள் நீங்கள் குறை சொல்லும் பார்ட்டியா என. உண்மையான பதில் கிடைக்கும். இல்லையேல் நெருங்கிய நண்பர்களிடம் கேளுங்கள்.குறை சொல்வது உங்களுக்கு எந்த நன்மையையும் தந்து விடப் போவதில்லை. இந்தப் பழக்கத்தால் என்ன நன்மை ஏற்பட்டது என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெரும்பாலும் உங்களுடைய நேரமும், உங்கள் நண்பர்களுடைய நேரமும் வெட்டியாய் செலவானதுதானே மிச்சம்?

உங்களை யாராவது குறை சொன்னாலோ, நேர்மையற்று விமர்சித்தாலோ நீங்கள் அதைக் கைதட்டி ரசிப்பீர்களா என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். `இல்லை' என்பதுதானே உங்கள் பதில்?

அதே மனநிலைதான் உங்களால் கிண்டலடிக்கப்படும் நபருக்கும் இருக்கும் என்பதை உணருங்கள்.பிறரை ஏற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் குறை சொல்தல் விலகிவிடும். பிறரை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டுமெனில் முதலில் நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே முதலில் உங்களை உங்கள் இயல்புகளோடே ஏற்றுக் கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொண்டிருங்கள்.

குறை சொல்தல் உறவுகள் இடையேயான பிணைப்பை உடைத்து விடும். பல விவாகரத்துகளுக்கே இந்தக் குறை சொல்தல் காரணமாகி விடுகிறது. அன்பு உருவாகும் இடத்தில் குறை சொல்வது இருப்பதில்லை. ஆத்மார்த்தமான அன்பை உள்ளத்தில் தேக்குங்கள், அடுத்தவர்களைக் குறை சொல்லும் பழக்கம் ஓடியே போய்விடும்.

குறையைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பவர்கள் அந்த குறைகளைப் போக்கும் வழியைப் பற்றிச் சிந்திக்க மறந்து போய் விடுகிறார்கள். 'இருட்டைப் பற்றியே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தும் வழியைப் பாருங்கள்' என்கிறார் கன்ஃபூஷியஸ்.இருப்பதை வைத்து மகிழ்வாக வாழும் மனநிலை உடையவர்கள் பெரும்பாலும் குறை சொல்வதில்லை. அவர்கள் மகிழ்வாக வாழும் வழியை யோசிப்பார்கள். எதைத் தேடுகிறோமோ அதுமட்டுமே நமக்குக் கிடைக்கும்!

கடின உழைப்பாளிகள் குறை சொல்வதில் தங்கள் நேரத்தை வீணடிப்பதில்லை. சோம்பேறிகள், கடின உழைப்பைத் தவிர்ப்பதற்காக குறை சொல்லும் பாணியைக் கையாள்கிறார்கள். குறை சொல்வது எதிர்மறை சக்தி. அதன் விளைவுகள் எதிர் மறையாகவே இருக்கும். தான் சரி என நிரூபிக்க மற்றவை எல்லாம் தவறு என மதிப்பிடும் மனநிலை மனதின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எதிரி.குறை சொல்வதிலிருந்து வெளியே வர விரும்பினால் பாராட்டப் பழகுங்கள். ஒரு நாளைக்கு ஐந்து பேரையாவது பாராட்டுவேன் என முடிவெடுங்கள். ஒரு நபரிடமிருக்கும் குறைகளைத் தாண்டி நிறைகளைக் கண்டு பிடிப்பீர்கள்.

அதே போல, குறை சொல்லும் நண்பர் கூட்டத்திலிருந்து வெளியே வாருங்கள். குறைந்தபட்சம் குறை சொல்லும் பேச்சை ஆதரிக்காமல் இருங்கள். குறை சொல்வது உங்களுக்குப் பிடிக்காது என்பது உங்கள் நண்பர்களுக்குப் புரிந்து விடும். அது உங்களுக்கு மரியாதையையும் பெற்றுத் தரும்.எதையும் மாற்ற முடியாது என்று தெரிந்தால் கூட 'என்னய்யா வெயில் மண்டையைப் பொளக்குது, என்னய்யா மழை படுத்துது, இதென்ன ஒரே தூசு மண்டலமா இருக்கு' என எடுத்ததுக்கெல்லாம் சலித்துக் கொள்ளும் மனிதர்கள் வாழ்வின் ஆனந்த தருணங்களை இழந்து விடுகிறார்கள்.

இன்றிலிருந்து ஒரு மாதம் குறையே சொல்ல மாட்டேன், நல்ல விஷயங்களைப் பாராட்டுவேன் என முடிவெடுத்துப் பாருங்கள். இந்த போட்டியில் ஜெயித்து விட்டால் உங்களுடைய அடிப்படை இயல்பே மாறிவிடும். ஒரு வேளை தோற்று விட்டால், அந்த நாளிலிருந்து அடுத்த ஒரு மாதம் முயற்சி பண்ணுங்கள்!

குற்றம் சொல்வதை நீங்கள் நிறுத்தும் வினாடியில் உலகம் உங்கள் கண்ணுக்கு முன்பாக அழகாகத் தெரியும். உங்கள் உறவுகள் அழகாகத் தெரிவார்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை ஆனந்தமாக மாறும். செடியில் இருக்கும் முட்களைத் தாண்டி, முட்களிடையே இருக்கும் ரோஜா கண்களில் தெரியும். வாழ்க்கை ஆனந்தமாய் மாறும்.


குறைகள் சொல்தல் இழிவாகும்
உயர்வும் இதனால் அகும்!


கூகுள் நிறுவனம் எவ்வாறு சம்பாதிக்கின்றது?





20, 222 ஊழியர்களையும் $ 21.80 பில்லியன் டாலர் வருவாயையும்கூகிள் நிறுவனம் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


இவ்வளவு பெருந்தொகையான பணத்தை கூகுள் எவ்வாறு சம்பாதிக்கின்றது? விளம்பரங்களின் மூலமே கூகுளின் 97 வீதமான வருமானம் இருப்பதாக wordstream  கூறுகிறது.Google Adsense சேவை மூலம் இணையத்தில் பலரும் சம்பாதித்து வருகின்றனர். விளம்பரதாரர்கள் கூகிளின் Adwords சேவை மூலம் விளம்பரங்களை கூகிளிடம் கொடுக்கிறார்கள். அதனிடமிருந்து வலைத்தளம் வைத்திருப்பவர்கள் விளம்பரங்களை தமது வலைப்பக்கங்களில் இட்டு அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் என்பது தெரிந்தவை. இதில் நன்றாக சம்பாதிக்க பொருத்தமான குறிச்சொற்களுடன் (Keywords) கட்டுரைகள் இருக்க வேண்டும். குறிச்சொற்கள் என்றால் வித்தியாசமாக நினைக்க வேண்டாம். அதாவது முக்கியமான சொற்களே குறிச்சொற்கள் எனப்படும். முக்கிய சொற்களை கட்டுரையில் தேவையான அளவில் பயன்படுத்தல் வேண்டும். அதுவும் கூகிள் எதிர்பார்க்கிற சொற்கள் இருப்பின் வருமானம் அதிகளவில் வரும்.

கூகிள் நிறுவனம் தனது வருமானத்தில் 97 சதவீதம் ஆட்சென்ஸ் மூலமாகவே ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரங்களில் ஒருவகையானது CPC Ads (Cost per Click). இந்த முறையில் ஒரு விளம்பரத்தை ஒரு தடவை கிளிக் செய்தால் இவ்வளவு காசு எனக் கணக்கிடப்படும். இதில் தான் வருமானம் அதிகளவில் வரக்கூடும். மற்றொரு முறையானது CPM Ads (Cost per Impressions) இதில் அந்த விளம்பரம் எத்தனை முறை பார்க்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஏற்ப பணம் நிர்ணயிக்கப்படும். ஆட்சென்சில் பொதுவாக 1000 முறைக்கு இவ்வளவு காசு என வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கிற வருவாய் குறைவாகவே இருக்கும்.
மேலெ சொன்ன CPC விளம்பரங்கள் மூலம் நன்றாக வருவாய் வரவேண்டுமெனில் முக்கிய குறிச்சொற்கள் நமது கட்டுரைகளில் தேவையான அளவில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதுக்காக இந்த குறிச்சொற்களை அதிகமாக போட்டோ அல்லது இந்த குறிச்சொற்களை மட்டுமே மனதில் நினைத்து கட்டுரைகளை எழுதக்கூடாது. WordStream என்ற நிறுவனம் நீண்ட நாட்கள் ஆராய்ந்து கூகிள் ஆட்சென்சில் அதிக பணம் தரும் குறிச்சொற்கள் எவையெவை எனப் பட்டியல் தயாரித்துள்ளது. இந்த குறிச்சொற்களை மையமாக வைத்து வலைப்பூவை நடத்தி வந்தால் உங்களுக்கும் வருமானம் அதிகளவில் வரும். வலைத்தளம் கண்டிப்பாக ஆங்கிலத்தில் இருப்பது அவசியம்.
கூகுள் அட்சென்ஸில் அதிக வருவாய் தரும் டாப் 20 சொற்கள்.


1. Insurance (example keywords in this category include "buy car insurance online" and "auto insurance price quotes")
2. Loans (example keywords include "consolidate graduate student loans" and "cheapest homeowner loans")
3. Mortgage (example keywords include “refinanced second mortgages” and “remortgage with bad credit”)
4. Attorney (example keywords include “personal injury attorney” and “dui defense attorney”)
5. Credit (example keywords include “home equity line of credit” and “bad credit home buyer”)
6. Lawyer ("personal injury lawyer," "criminal defense lawyer)
7. Donate ("car donation centers," "donating a used car")
8. Degree ("criminal justice degrees online," "psychology bachelors degree online")
9. Hosting ("hosting ms exchange," "managed web hosting solution")
10. Claim ("personal injury claim," "accident claims no win no fee")
11. Conference Call ("best conference call service," "conference calls toll free")
12. Trading ("cheap online trading," "stock trades online")
13. Software ("crm software programs," "help desk software cheap")
14. Recovery ("raid server data recovery," "hard drive recovery laptop")
15. Transfer ("zero apr balance transfer," "credit card balance transfer zero interest")
16. Gas/Electricity ("business electricity price comparison," "switch gas and electricity suppliers")
17. Classes ("criminal justice online classes," "online classes business administration")
18. Rehab ("alcohol rehab centers," "crack rehab centers")
19. Treatment ("mesothelioma treatment options," "drug treatment centers")
20. Cord Blood ("cordblood bank," "store umbilical cord blood")

பூமி முழுவதும் வெப்ப வேறுபாடு

பூமி முழுவதும் வெப்ப வேறுபாடு காணப்படுவதற்கான காரணங்கள் யாவை?


பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!
வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது! அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது! வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது. அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது! அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும். அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.
3000 ஆண்டுகளாகக் கனடாவின் வடகோடி ஆர்க்டிக் பகுதியில் துருத்திக் கொண்டிருந்த ஒரு பூதகரமான பனிக்குன்று, கடந்த ஈராண்டுகளாகப் பூகோளச் சூடேற்றத்துக்குப் புதிய சான்றாக உடைந்து கடலில் சரிந்து கரைந்து விட்டது. ஆர்க்டிக் பகுதியின் மிகப் பெரும் பனியுடைப்பு எனக் கருதப்படும் அந்த புராதன பனி மதில் சிதைவுக்கு, நூறாண்டு காலமாகப் படிப்படியாய் ஏறிய வெப்ப மிகுதியும், 1960 ஆண்டு முதல் விரைவாக எழுந்த வெப்பப் பெருக்கமுமே முக்கிய காரணங்கள் என்று ஆய்வாளர் கூறுகிறார்!

கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க புதிய வழிகள்


கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க புதிய வழிகள்


கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
* உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.
* ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையில்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும்.
* டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.
* டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்…
* எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.
* தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files)
* இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.
* உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும்.
இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்

உலகிலேயே அதிகவிலை கொண்ட நவீன கார் அறிமுகம்


உலகிலேயே அதிகவிலை கொண்ட நவீன கார் அறிமுகம்



இந்தியாவில் ரூ.16 கோடி மதிப்புள்ள நவீன ரக சொகுசு கார் அறிமுகப்படுத்தப்படுகிறது. உலகிலேயே அதிக விலை கொண்ட இந்த காரின் பெயர் 'புகட்டி வேரோன்' என்பதாகும்.

மணிக்கு 407 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்ட இந்த கார், 2.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லே மற்றும் மேபேக் போன்ற, கார்கள் ஏற்கனவே இங்கு புழக்கத்தில் உள்ளன. அந்த வரிசையில் அவற்றை விட அதிகவிலை கொண்ட புகட்டி வேரோன் காரும் சந்தையில் அறிமுகமாகிறது.

இது பற்றி ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவுக்கான இந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர் கய் காக்வெலின் குறிப்பிடும் போது, "புகட்டி வேரோன் கார் வடிவமைப்பின் உச்சமான தாகும். இதன் முன்னோட்ட விற்பனையாக மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையில்தான் விற்பனைக்கு தருகிறோம்." என்றார் காய் காக்வெலின். 

உலகின் மிகக் குறைந்த விலையான ரூ 1 லட்சம் மதிப்பு கொண்ட நானோ கார் முதல், உலகின் அதிக விலையான ரூ 16 கோடி விலை கொண்ட புகட்டி வேரோன் வரை விதவிதமான கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது பெருமைக்குறியதாகும்.

மீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ.


மீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ.


“பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள் எப்போதும் சூரியனை நோக்கியே பறந்து செல்லும்.  விண்ணுளவி வியாழக் கோளின் மறைவுப் புறத்தில் பயணம் செய்யாதபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.”
ஸ்காட் போல்டன்,  ஜூனோ திட்டப் பிரதம விஞ்ஞானி
(ஜூனோ விண்ணுளவியின்) முக்கிய முதலிரண்டு சோதனைகள் :
1.  பூதக்கோள் வியாழனில் எவ்வளவு நீர் உள்ளது ?
2.  வியாழக் கோளின் மைய உட்கருவில் இருப்பது கன மூலகங்களின் திரட்சியா அல்லது நடு மையம் வரை இருப்பது அழுத்த வாயுத் திணிவா ?
ஸ்காட் போல்டன்

“கடந்த நூற்றாண்டுகளில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”
காலிலியோ (1564-1642)
நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை.  நாமறியாதவை கணக்கில் எண்ணற்றவை.  புரிந்து கொள்ள முடியாத கரையற்ற ஒரு கடல் நடுவே, சிறு தீவு ஒன்றில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம். நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மேலும் சிறிது புதுத் தளத்தைக் கைப்பற்றுவதுதான்.
தாமஸ் ஹக்ஸ்லி [Thomas Huxley] (1825-1895)
2011 இல் பூதக்கோள் வியாழனை நோக்கி மீண்டும் நாசா பயணம்
ஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதிச் செலவில் மீண்டும் நாசா 2011 ஆகஸ்டு 5 ஆம் நாள் பிளாரிடா கெனாவரல் ஏவுமுனைத் தளத்தில் சுமார் 200 அடி (60 மீடர்) உயரமுள்ள அட்லாஸ் -5 ராக்கெட்டில் (Atlas -5 Rocket) மனிதரற்ற ஜூனோ விண்ணுளவியை ஏற்றிக் கொண்டு ஆய்வுகள் செய்ய அனுப்பியுள்ளது. ஜூனோ விண்ணுளவி 5 ஆண்டுகள் 1740 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செந்நிறக் கோள் செவ்வாயைக் கடந்து, கோடிக் கணக்கான முரண்கோள்கள் சுற்றும், முரண்கோள் வளையத்தை ஊடுருவிச் (Asteroid Belt) சென்று, 2016 இல் புறக்கோள் வியாழனை நெருங்கி ஓராண்டு சுற்றி வரத் திட்டமிடப் பட்டுள்ளது.  அட்லாஸ் -5 ராக்கெட் சுடப்படும் முன்பு அதன் மேலடுக்கில் ஹீலியம் ஏற்றும் சாதனத்தில் கசிவு உண்டாகி பிரச்சனை எழுந்ததால், அதை அடைக்க ஏவுக் காலம் சற்று தாமதமானது.  ஆகஸ்டு 5 ஆம் தேதி ஏவப்பட்ட ஜூனோ விண்கப்பல் இப்போது சுமுகமாகப் பயணம் செய்து வருகிறது.
ஜூனோ விண்ணுளவி முதல் இரண்டு ஆண்டுகள் பரிதியைச் சுற்றி வந்து, பூமிக்கு மீண்டு அதன் ஈர்ப்பு வீச்சு விசையில் மேலும் உந்தப்பட்டு (Earth Flyby) அடுத்த மூன்று ஆண்டுகள் வியாழனை நோக்கி வேகமாய்ச் செல்லும்.  பூமியிலிருந்து 390 மில்லியன் மைல் (640 மில்லியன் கி.மீ.) தூரத்தில் இருக்கும் பூதக்கோள் வியாழனுக்குப் பயணம் செய்ய முதன் முதலாக பரிதி மின்சக்தித் தட்டுகள் (Solar-Panelled Mission) மூன்று அமைக்கப் பட்டு இயங்கும் விண்வெளித் திட்டம் இது.  சூரிய மின்தட்டு ஒன்றின் நீளம் 30 அடி.  அகலம் 9 அடி.  பூதக்கோள் வியாழன் மீது படும் பரிதி ஒளி பூமியின் மீது விழும் ஒளியைப் போல் 25 மடங்கு குறைந்தது.  ஆகவே ஜூனோ விண்ணுளவி வியாழனின் மறைவுப் புறத்தில் சுற்றாமல் துருவங்களைச் சுற்றி வரப் போகிறது.  இதற்கு முன்பு வியாழன், சனிக்கோள் நோக்கிச் செல்லும் இவ்வித நீண்ட பயணங்களுக்குக் கதிரியக்க முள்ள புளுடோனிய மின்கலம் பயன்படுத்தப் பட்டது.  ஜூனோவில் பரிதி மின்சக்தி திரட்ட, 120 டிகிரிக் கோணத்தில் இருக்கும் மூன்று சூரியத் தட்டுகளில் 18,000 பரிதிச் செல்கள் (Solar Cells) அமைப்பாகி உள்ளன.  பூதக்கோள் வியாழனின் துருவச் சுற்று வீதியில் 33 நீள்வட்டச் சுற்றுக்களை 3000 மைல் (5000 கி.மீ.) உயரத்தில் ஓராண்டு புரிந்து வர ஜூனோ திட்டமிடப் பட்டுள்ளது.  இறுதியில் பரிதி மின்தட்டுகள் பழுதடையும் போது வியாழக் கோளில் ஜூனோ விண்ணுளவி சுற்றுவீதியை முறித்துக் கொண்டு வியாழனில் விழும்படி நாசா விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்துள்ளார்.

ஜூனோ விண்ணுளவித் திட்டத்தின் முக்கிய குறிப்பணிகள் என்ன ?
பூதக்கோள் வியாழனே பரிதி மண்டலத்தில் சுற்றிவரும் மற்ற கோள்களை விடப் பெரியது.  அது சூரியனைப் போலிருக்கும் ஒரு வாயுக் கோள்.  வியாழனின் தோற்றத்தை யும் வளர்ச்சியையும் புரிந்து கொண்டால் ஓரளவு சூரிய மண்டலத்தின் ஆரம்பத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  ஜூனோ விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள ‘தூர முகர்ச்சிக் கருவிகள்’ (Remote Sensing Instruments) பூதக்கோளின் பல்லடுக்குச் சூழ்வெளியை உளவி அவற்றின் உஷ்ணம், உட்பொருட்கள்,  முகில் நகர்ச்சி, மற்றுமுள்ள தளப் பண்பாடுகளைப் பதிவு செய்து, பூமிக்கு மின்தகவல் அனுப்பி வைக்கும்.  மேலும் வியாழனில் தோன்றும் முகில் வண்ணப் பட்டைகளின் உள்ளமைப்பைக் கண்டறியும்.  சிறப்பாக கடந்த 300 ஆண்டு களாகக் காணப்படும் விந்தையான ‘கொந்தளிக்கும் செந்திலகம்’ (Violently-Active Red Spot) என்ன வென்று ஆழ்ந்து அறியப்படும்.  எல்லாவற்றும் மேலாக பூதக்கோள் வியாழனில் உள்ள நீரின் செழிப்பை அறிந்து ஆக்ஸிஜன் எத்தனை அளவு இருந்தது என்று கணக்கிடவும், பரிதி மண்டலத் தோற்றத்தை உறுதிப் படுத்தவும் பயன்படும்..  அத்துடன் பூதக்கோள் வியாழனுக்கு நடுவே உள்ளது திண்ணிய கடும் பாறையா அல்லது வாயுத் திணிவு மிகுந்து வியாழன் உட்கருவில் அழுத்தமுடன் உறைந்து போய் உள்ளதா என்றும் அறியப்படும்.  வியாழக் கோளின் காந்த தளத்தையும், ஈர்ப்புக் களத்தையும் பதிவு வரைபடக் கருவி வரையும்.  பூதக்கோள் வியானின் துருவக் காந்தக் கோளத்தை (Polar Magnetosphere) உளவி அது எப்படி வியாழனின் சூழ்வெளி வாயு மண்டலத்தப் பாதிக்கிறது என்று ஆராயும்.  ‘வியாழனில் தென்படும் தென்துருவ, வடதுருவ ஓவியக் கோலங்களையும்’ (Polar Auroras) ஜூனோ ஆராயும்.
வியாழக் கோளை முன்பு சுற்றிய நாசாவின் விண்கப்பல்கள்
நாசா காஸ்ஸினி விண்கப்பல் (1997- 2004) இல் சனிக்கோளைச் சுற்ற அனுப்புவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, காலிலியோ விண்வெளிக் கப்பல், வியாழனைச் சுற்றிவர ஏவப்பட்டு, ஏராளமான விஞ்ஞானத் தகவல்களைப் பூமண்டலத்துக்கு அனுப்பியுள்ளது. விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூட்டிய, காலிலியோவின் பெயரைக் கொண்ட நாசாவின் விண்கப்பலே, வியாழனை ஆராயும் முதல் ‘விண்ணுளவி’ [Space Probe] ஆனது !  தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளி யின் முகத்திரையை உலகுக்குத் திறந்து வைத்தவர், காலிலியோ! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு துணைக் கோள்களை முதலில் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ!

நாசா 1972 இல் ஏவிய பயனீயர்-10, பயனீயர்-11 [Pioneer-10, Pioneer-11], அடுத்து1977 இல் அனுப்பிய வாயேஜர்-1, வாயேஜர்-2 [Voyager-1, Voyager-2] ஆகிய நான்கு முன்னோடி விண்சிமிழ்கள் பயணம் செய்து முதன் முதலில் வியாழன், சனிக்கோளின் விஞ்ஞான விபரங்களை உளவிப் பூமிக்கு ஏராளமான தகவல் அனுப்பின. 1987 இல் அனுப்பிய காலிலியோ விண்கப்பல் எட்டாண்டுகள் பயணம் செய்த பிறகு, 1995 இல் வியாழக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் இழுக்கப்பட்டு, நீள்வட்ட வீதியில் சுற்றி, ஓர் உளவுச்சிமிழை [Probe Module] வியாழ தளத்தில் இறக்கி, விண்வெளி வரலாற்றில் முதன்மை பெற்றது.  ஒரு ‘சுற்றுச்சிமிழும்’ [Orbiter] ஒரு ‘சூழ்வெளி உளவுச்சிமிழும்’ [Atmospheric Probe] இணைக்கப் பட்டிருந்த, காலிலியோ விண்வெளிக் கப்பல் இரண்டு முக்கியப் பணிகளை நிறைவேற்றத் தயாரானது. முதல் பணி வியாழனை நெருங்கி, சுற்றுச்சிமிழ் சுழல்வீதியில் விழானைச் சுற்றிவருவது. அடுத்த பணி உளவுச்சிமிழை விடுவித்து, வியாழ தளத்தில் அதை மெதுவாக இறக்குவது.  மின்சக்தி பரிமாறப் புளுடோனியம் டையாக்ஸைடு [PuO2] பயன்படும் இரண்டு ‘கதிர்வீச்சு வெப்ப ஜனனிகள்’ [RTG, Radioisotope Thermal Generators] அமைக்கப் பட்டிருந்தன.

கொந்தளிக்கும் செந்திலகம்! பூதக்கோளில் புயல் காற்று !
வியாழச் சூழகத்தில் பொங்கி எழும் வாயு மண்டலம் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து விரிகிறது! மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன! அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது! புயல் காற்று மத்திம ரேகையில் அடிக்கும் உச்ச வேகம் 360 mph!
வியாழனின் பெயர் பெற்ற ‘மாபெரும் செந்திலகம் ‘ [Great Red Spot] சீரிய தொலை நோக்கி தோன்றிய நாள் முதல், 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்பட்டு கொந்தளித்து வருகிறது! செந்திலகம் முட்டை வடிவானது! அதன் கொந்தளிப்புக்குக் காரணம் இன்னும் அறியப் படவில்லை.
முகில் ஆட்டத்திற்குச் செந்நிறத்தைத் தருபவை, புறவூதா [Ultraviolet] ஒளியை விழுங்கும், கந்தகம் [Sulfur], ஃபாஸ்ஃபரஸ் [Phosphorus] போன்றவற்றின் இரசாயனக் கூட்டுறுப்புகள் [Compounds]. மாறிக் கொண்டே வரும் செந்திலகத்தின் தற்போதைய பரிமாணம் 16200 மைல் நீளம்; 8700 மைல் அகலம்.
மாபெரும் புயல்கள் வியாழ மண்டலத்தில் திடீர் திடீரென வீசி அடிக்கின்றன!சூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்த்தியான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றன! வாயுக் குமிழ்கள் தாறுமாறான வெப்பத் திட்டுகளை தாங்கிக் கொண்டு, புயல் காற்றுக்களைக் கட்டுப் படுத்த, வியாழனில் மேடு, பள்ளங்கள், மலைகள் ஏதும் இல்லாது, எல்லாத் திசைகளிலும், குறுக்கு நெடுக்காக முறுக்கி அடிக்கின்றன!

(தொடரும்)
++++++++++++++++
தகவல் :
Picture Credit : NASA, ESA,
1. Galileo Project Information www.nssdc.gsfc.nasa.gov/planetary/galileo.html
2. Exploration of the Planets By: Brian Jones [1991]
3. Jupiter By: Garry Hunt & Patrick Moore